districts

மக்கள் மருந்தகத்தில் வீரியம் குறைந்த மருந்துகள்?

கோவை, ஜன.3- ஒன்றிய அரசின் உதவியுடன் செயல்படும் மக்கள் மருந்தகத் தில் வீரியம் குறைந்த மருந்துகள் விற்கப்படுவதாக அகில இந்திய  மருந்து விற்பனை பிரதிநிதிகள்  சம்மேளனம் குற்றம்சாட்டியுள் ளது. ஒன்றிய அரசால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக திட்டம்.  சாதாரண மக்களுக்கு குறிப்பாக  ஏழைகளுக்கு மலிவு விலையில்  தரமான மருந்துகளை வழங்குவ தற்கான தொலைநோக்கு பார்வை யுடன் நாடு முழுவதும் 739 மாவட் டங்களில் செயல்படுத்தப்பட்டது. இதுபோன்ற மருந்தகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந் துகள் மற்றும் சானிடரி நாப்கின்கள்,  அறுவை சிகிச்சை சாதனங்கள் என அனைத்துமே மலிவு விலை யில் கிடைக்கும். தற்போது மருந் துக் கடைகள் 8735 ஆக உயர்துள் ளது. வரும் 2024-ம் ஆண்டு மார்ச்  மாதத்திற்குள் 10,000 மருந்துகடைக ளாக உயர்த்தவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. நடப்பாண்டில் மக்கள் மருந்தகங்களில் 100 கோடி ரூபாய்  அளவுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  இதுகுறித்து அகில இந்திய  மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனத்தின் அகில இந்திய  தலைவர் ரமேஷ்சுந்தர் கூறுகை யில், தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் சுமார் 50  பாரதீய மக்கள் மருந்தகங்கள் உள்ளது. அதிகரித்து வரும் மருந்து களின் விலையேற்ற பிரச்சினை காரணமாக அதிகமானோர் இந்த  மருந்தகங்களை மக்கள் நாடு கின்றனர். ஆனால், விற்பனை செய் யப்படும் மருந்துகள் வீரியம் குறைந்ததாக இருப்பதாக பல ரும் குற்றம் சாட்டுகின்றனர்.  ஒன்றிய அரசின் நிதியுத வியுடன் செயல்படும் மக்கள் மருந் தகத்தில் கிடைக்கும் பெரும்பா லான மருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதோடு, சில தனியார் நிறுவனங்களிடமும் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக  தெரிகிறது. இந்த மருந்தகங்கள் துவங்க பாஜக கட்சியினருக்கு மட்டுமே அனுமதி கிடைப்பதாக வும் கூறுகின்றனர். இந்த மருந்து கடைக்கு ஒன்றிய அரசு கடனுதவி யும், மானியமும் வழங்கியும் வரு கிறது. உண்மையாக ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கசெய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருப்பின், முதலில் அத்தியாவசியத் தேவையான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து  செய்யவேண்டும். அதோடு விலை  நிர்ணயம் செய்வதிலும் கட்டுப்பாடு  விதிக்கவேண்டும்.  மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு  தகுந்தாற்போல் விலையினை நிர்ணயிக்க அனுமதி அளித்து விட்டு, நூறு மருந்துகடைகளுக்கு இரண்டு கடைகள் பெயரளவிற்கு மக்கள் மருந்தகம் என்ற பெயரில் பாதி விலைக்கு தருவது மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.