அவிநாசி, ஏப்.7- திருமுருகன்பூண்டி நக ராட்சி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந் துள்ளனர். திருமுருகன்பூண்டி நக ராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில்அம்மாபாளையம் பகுதியில் கட்டண பொதுக்கழிப்பிடம் அமைந்துள்ளது. இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நான்கு நாட்களாக இந்த பொதுக் கழிப்பிடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்துள்ள னர். ஆனால், டெண்டர் முறை முடிவடைந்துவிட்டதன் கார ணமாக கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கழிப்பிட டெண் டர் முறை காலாவதி ஆகிவிட்டால் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்களை நியமித்து கட்டணம் வசூலிக்கலாம். இதைவிடுத்து கழிப்பிடத்தை பூட்டி வைப்பது முறையல்ல. ஆகவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலை யிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.