districts

img

ரூ.70 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

ஈரோடு, மார்ச் 8- ஈரோடு மாவட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளரச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.70.06 கோடி மதிப் பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கினார். ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளை யம், காசி திருமண மண்டபத்தில் செவ் வாயன்று கூட்டுறவுத்துறையின் சார் பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந் திரா தலைமை வகித்தார். மாநிலங்க ளவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வ ராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி 3 ஆயிரத்து 552  மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள  35 ஆயிரத்து 907 மகளிர் உறுப்பினர் களின் ரூ.70.06 கோடி மதிப்பீலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றி தழ்களை வழங்கினார். மேலும் 14 புதிய நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார்.  இந்நிகழ்வின்போது, ஈரோடு மாநக ராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் நவ மணிகந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார், துணைப் பதிவாளர்கள் நர்மதா, ரவிச் சந்திரன், கந்தசாமி, ராமநாதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.