districts

img

திருப்பூரில் சுமை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 17 – சுமைப்பணித் தொழி லாளர்களுக்குத் தனி நலவா ரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சுமைப் பணித் தொழிலாளர் சங்கத்தி னர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமைப்பணிகளில் தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க  வேண்டும், வெளி மாநிலத் தொழிலாளர் களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்  பாதுகாப்பு சட்டங்களை முறையாக அம லாக்க வேண்டும், தொழிலாளர் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் சமூகப் பார்வையற்ற நீதி மன்றத் தலையீடுகளைத் தடுத்து நிறுத்த  வேண்டும், அரசு மூலம் அடையாள  அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்  எழுப்பப்பட்டன. திருப்பூர் குமரன் சிலை முன்பாக வெள் ளியன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைத்  தலைவர் பி.பாலன் தலைமை வகித்தார்.  சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் எம்.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகி யோர் உரையாற்றினர். இதில் பெருந்திர ளான சுமைப்பணித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.