தனியார் கல்லூரி விடுதி உணவில் பல்லி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வில் உறுதி
சேலம், பிப்.2- சேலத்திலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதி உணவில் பல்லி இருந்தது, உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகளின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு சாலையில் தனியார் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் சமை யல் கூடத்தில் மாணவர்களுக்கு செய்த குழம்பில் பல்லி இருந்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் உணவு பாதுகாப் புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாது காப்பு அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட சமையல் கூடத் தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சமையல் கூட வளா கத்தை முறையாக பராமரிக்காததும், திறந்த வெளியில் சமையல் செய்ததும், பல்லி இருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத காரணத்தினால் மேற்கண்ட சமை யல் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், ஆய்வின் போது கண்ட குறைகளை நிவர்த்தி செய்யும்படி உணவு பாது காப்பு சட்டம் பிரிவு 32 இன் படி முன்னேற்ற அறிவிப்பு வழங் கப்பட்டுள்ளது. மேலும், முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யப்பட்டபின், மறு ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரம்ப சுகாதார கட்டிடப் பணிகள்: பொருத்தமான இடத்திற்கு மாற்ற கோரிக்கை
திருப்பூர், பிப்.2- அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையவளாக பகுதியில் மேற்கொள்ள உள்ள ஆரம்ப சுகாதார மையம் கட்டிடப் பணி களை, இதே பகுதியில் வேறு பொருத்தமான இடத்தில் அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநக ராட்சி மேயரிடம் புதனன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி.கே.கனகராஜ் மாநகராட்சி மேயரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி, 17 ஆவது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் குழந்தைகளுக்கான இரண்டு அங்கன்வாடி மையங்கள் வளாகத்தில் ஆரம்ப சுகா தார மையம் கட்டடக் கட்டுமானப் பணிகள் தொடங்குவதாக தெரிகிறது. இந்த இடத்தை ஒட்டியே பொதுச்சுகாதார (கழிப் பிடம்) வளாகம், பாதாள சாக்கடை கழிவுகள் நீர்றேர்ரு நிலை யம் (பம்பிங் ஸ்டேசன்), சக்தி விநாயகர் கோவில் மற்றும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் தற்போதைய நிலை யில் செயல்பட்டு வருகிறது. மேலும், இதே இடத்தில் ஆரம்ப சுகாதார மையக் கட்டிடமும் வந்தால் பொதுப் பயன்பாட்டிற்கு காலியிடம் என்பதே இருக்காது. மேலும் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ கழிவுகளாலும், பம்பிங் ஸ்டேசன் மனித கழிவுகளில் ஏற்படும் துற்நாற்றத்தால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியின் பொதுமக்கள் சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கட்சியின் பகுதி கிளைகள் சார்பாகவும், இப்பகுதி யின் இரண்டு அங்கன்வாடி மையங்கள் வருங்கால வளர்ச்சி யினை கருத்தில் கொண்டு இந்த ஆரம்ப சுகாதார மையம் கட்டி டத்தை அங்கன்வாடி குழந்தைகள் வளாகத்திலிருந்து மாற்றி இதே 17 ஆவது வார்டு பகுதியில் பொருத்தமான மாநகராட் சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்க வேண்டு எனக் கூறப் பட்டுள்ளது. இந்நிகழ்வில். முன்னாள் மாமன்ற உறுப்பினர் இ.பி.ஜெய கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினர்கள் பா.சௌந்திராஜன், ஆர்.நந்தகோபால், வெ. தமிழ்வாணன் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
கோவில் கும்பாபிஷேகத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு: முடிந்தவரை சேவை செய்த தன்னார்வ அமைப்புகள்
அவிநாசி, பிப்.2- அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் அடிப்படை வச திகள் இன்றி பொதுமக்கள் தவித்த னர். கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்தலங்களில் அவி நாசி லிங்கேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்நிலையில், 14 ஆண்டுக ளுக்குப் பிறகு கோவில் கும்பாபிஷே கம் நடத்தப்பட்டு முடிந்துள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் எந்த வித அடிப் படை வசதிகளும் செய்யப்படவில் லை. தன்னார்வலர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, பொதுமக்களுக்கு குடிநீர் முதல் பழ ரசம், பிஸ்கட் பாக் கெட்டுகள், ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிப்பு, மொபைல் கழிப்பறைகள் போன்றவை செய்து கொடுத்துள்ள னர். இருப்பினும் காலை கும்பாபி ஷேகம் நடைபெறும் நேரத்தில் கைக் குழந்தைகள் எடுத்து வந்த தாய்மார் கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கு உண் டான அறை அமைக்கவில்லை. பொது இடங்களில் குடிநீர் வசதி ஏற் பாடு செய்யப்படவில்லை. அதிக ளவில் கூட்டம் வந்ததாதல், காவல் துறையினரே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திணறும் சூழ்நிலை ஏற்பட் டது. கூட்ட நெரிசல்களில் பலருக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டு அவதி யில் தவித்தனர். அதேபோல தனியார் மருத்துவம னைகள் தன்னார்வ அமைப்பு மூலம் மருத்துவ சேவைகள் அமைக்கப்பட் டது. தன்னார்வ அமைப்புகள் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கோவில் கும் பாபிஷேக பணிகள் செய்தனர்.கோவில் கும்பாபிஷேகத்தில், ஒரு சிலருக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட் டுள்ளனர். கும்பாபிஷேகம் நடைபெ றும் முந்தைய தினம் கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலை வர் ஆகியோரை அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளூர் மக்களுக்கு பாஸ் வழங்காமல் இழுத்தடிப்பு செய் ததை கண்டித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அதேபோல பத்திரிக்கையாளர்க ளுக்கு பாஸ் வழங்காமல் காலை முதல் இரவு வரை கோயில் நிர்வாகத் தில் காக்க வைத்தனர். ஒரு கட்டத் திற்கு மேல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பாஸ் வழங்குவது என்று முடிவு எடுத்ததால், பத்திரிக்கையா ளர்கள் அனைவருக்கும் பாஸ் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதன் பிறகு துண்டு சீட்டில் அச்சடிக்கப்பட்டு அதனை பாஸாக வைத்துக் கொள்ளுமாறு விநியோ கம் செய்தனர். முறையாக அழைப்பு வழங்காமல் பேரூராட்சி நிர்வாக மும், முடிந்தவரை காவல் துறையும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை நடத் திக் கொடுத்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் இதுபோல் நடைபெறா மல் இருக்க மாவட்ட நிர்வாகம் கூடு தல் கவனம் செலுத்தி ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள னர். முஸ்லிம் மதத்தினர் உதவி: ஜே.ஏ.எம்.&கே நகைக்கடை உரிமையாளர் பத்தாயிரம் தண்ணீர் பாட்டில்கள், 5000 பேருக்கு பழரசங் கள் போன்றவை வழங்கியுள்ளனர். அதேபோல முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு உதவிக்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வைத்தனர்.
பருத்தி ஏலம்
திருப்பூர், ஜன.2- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடை பெற்ற ஏலத்தில் ரூ.69.32 லட் சத்துக்கு பருத்தி விற்பனை யானது. வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழனன்று நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,064 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒரு குவிண்டால் ரூ. 5,900 முதல் ரூ.7,293 வரை விற்பனையானது. சராசரி யாக குவிண்டால் ரூ. 6,650க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைக் காட்டி லும் சராசரி விலை குவிண்டா லுக்கு ரூ.400 வரை விலை உயர்ந்திருந்தது. இதில் மொத்தமாக ரூ.69.32 லட்சத் துக்கு பருத்தி விற்பனையா னது.
தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல்
மே.பாளையம், பிப்.2- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் தங்கும் விடுதியினுள் ரகசிய அறைகள் அமைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இரண்டு தனியார் லாட்ஜ்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் இருபதிற்கும் மேற் பட்ட தனியார் காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ் கள் என தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரு கின்றன. இதில் சில லாட்ஜ்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதனடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் புத னன்று நடத்திய திடீர் அதிரடி சோதனையில், இரண்டு தனியார் லாட்ஜ்களில் ரகசிய அறை களை அமைத்து, பாலியல் தொழில் நடத்தப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லாட்ஜ்களில் இருந்த பெண்களை மீட்ட போலீசார், அவர்களை கோவை காப்பகத்திற்கு அனுப்பி வைத் தனர். மேலும், பாலியல் தொழில் நடத்தி வந்த ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மக்கள் அதிகம் கூடும் கடைகள் நிறைந்துள்ள இப்ப குதியில் தொடர்ந்து இது போன்ற குற்றங் கள் நடைபெற்று வருவது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தி வந்த இரண்டு லாட்ஜ்களுக்கும் சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட வருவாய் கோட்டாச்சியர், மேட்டுப்பாளை யம் வட்டாச்சியர் மற்றும் காவல்துறையினர் வெள்ளியன்று இரு லாட்ஜ்களையும் மூடி முத்திரையிட்டு சீல் வைத்தனர்.
வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
உதகை, பிப்.2- கோத்தகிரி அருகே உள்ள கன்னேரி முக்கு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப் பட்டு வருவதோடு, குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இதில் கரடி,காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியி ருப்பு பகுதியில் உலா வருவது தொடர்க தையாக உள்ளது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியில் வசித்து வரும் தாவித் பாக்கியராஜ் என்பவரது வீட்டின் அருகே இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றுள் ளது.இந்த காட்சி குடியிருப்பில் வைக்கப்பட் டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. வனத் துறையினர் கன்னேரிமுக்கு பகுதியில் உலா வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
பெண் மீது தாக்குதல்: ஐபிஎஸ் அதிகாரி கைது
கோபி, பிப்.2- கோபி அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ரங்கராஜன். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கர்நாடக மாநி லத்தில் உள்ள பல மாவட்டங்களில் காவல்துறை உயர் அதி காரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையி்ல், கடந்த சில நாட்களாக விடுப்பில் தனது சொந்த ஊரான கோபிசெட்டி பாளையம் வந்துள்ளார். பல வருடமாக தான் பழகி வந்த உடன் பணியாற்றும் சுஜாதா என்பவரையும், சொந்த ஊருக்கு அருண்ரங்கராஜன் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரத்தில் சுஜாதா, அருண்ரங்கராஜன் ஆகிய இரு வரும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் திரும்பிய அருண் ரங்கராஜன், சுஜாதா ஆகிய இருவருக்கும் கடந்த 31 ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இத்தகராறு ஒரு கட்டத்தில் முற்றிப்போக, சுஜாதாவை அருண்ரங்கரா ஜன் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த சுஜாதா கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, கோபி காவல்நிலையத்தில் சுஜாதா புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்த போலீசார், ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜனை கைது செய்தனர்.