அவிநாசி, அக்.29- அவிநாசியில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால் வியா பாரிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. அவிநாசி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இக்கடைகள் பல வருடங்களாக இருந்து வரு கின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமை களில் சாலையோரங்களில் பனியன் துணிக்கடைகள், செல் போன் உதிரி பாகங்கள், பேன்சி பொருட்கள் உட்பட பல கடை அமைக்கப்படுகின்றன. இந்த கடை களில், விலை குறைவாக இருப்ப தால் புலம்பெயர்ந்த தொழிலாளி கள் அதிகளவில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் வணிகர் சங்கத் தினர், சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் நோக்கத்தில், சாலையோர கடைகளை முறைப் படுத்த வேண்டும் எனவும், கடை களை சந்தையில் அமைக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வந்தனர். இத னால், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலையோர வியாபாரி கள், வணிகர் சங்கத்தினரிடம் வட்டாட்சியர், நெடுஞ்சாலைத் துறை, காவல்துறையினர் தனித் தனியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் சாலையோர வியா பாரிகள், வணிகர்கள் கடைக்கு பாதிப்பில்லாத வகையில் கடை களை அமைத்துக் கொள்ள வேண்டும். இக்கடையில் ஒரு கட்டில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஞாயிறன்று வட்டாட்சியர், காவல் துறை, நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர கடைகளை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் சாலையோர கடைகள் 100 இருந்த நிலையில், மிகவும் குறைந்து 20 முதல் 30 கடைகள் மட்டுமே தற்போது செயல்படு கின்றன. மீதமுள்ள கடைகள் சந்தைக்கு மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது பலரும் சாலையோரங்களில் கடை அமைக்க முடியாமல் ஏமாற்ற மடைந்தனர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அருந்ததியர் மடம் பகுதியில் சாலையோர வியாபாரிகள் கடை அமைக்க கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த அருந்ததியர் மடமானது பூட்டப்பட்டு சாவி அரசிடம் உள்ளது. இதனால், சாலையோர வியாபாரிகளை முற்றிலும் அகற்றும் நோக்கமாக தெரிகிறது. ஆனால், வணிக கடைகள், நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கி ரமிப்பு செய்துள்ளனர். உடனடி யாக மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் வணிக நிறுவனங் கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மீண்டும் சாலையோர வியாபாரிகளை கடையமைக்க உரிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.