தருமபுரி, ஜன.27- ஜன.30 ஆம் தேதியன்று ஜாக்டோ – ஜியோ சார்பில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் பொதுநூலகத் துறை அலுவலர் சங்கம் பங்கேற்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு பொதுநூலகத்துறை அலுவலர் சங்க தருமபுரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவல கத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனிராஜ் தலைமை யில் நடைபெற்றது. நிர்வாகி குமரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் சண்முகம், பொருளாளர் சர வணகுமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தார். முன் னாள் மாநிலத் தலைவர் பிரபாகரன், முன்னாள் மாநிலச் செய லாளர் சரவணன் கருத்துரையாற்றினர். இக்கூட்டத்தில் நூல கர் ராமச்சந்திரனுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியரால் இவ் வாண்டு சிறப்பாக பணியாற்றியதற்காக சானறிதழ் வழங்கப் பட்டது. நற்சான்றிதழ் பெற்ற ராமச்சந்தினுக்கு சங்கத்தின் சார்பில், பாராட்டி பயனாடை வழங்கப்பட்டது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். முடக் கப்பட்ட சரண்டர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜன.30 ஆம் தேதி யன்று நடைபெற உள்ள மறியலில் பெருந்திரளாக பங்கேற் பது என முடிவு செய்யப்பட்டது.