districts

img

தாராளமய கொள்கைகள் மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன: எஸ்.கண்ணன்

திருப்பூர், டிச. 5 - தாராளமய கொள்கைகள் மூல தன குவிப்புக்கும், சந்தையைக் கைப் பற்றவும் தீவிரமாக செயல்படும் நிலையில் மாநில சுயாட்சிக் கொள் கைகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள் ளாகி இருக்கின்றன என்று மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் கூறி னார். திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் திங்களன்று முகிலன் தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சியின்  10 நாள் தொடர் வகுப்பின் ஆறாம்  நாள் அமர்வில், அரசியல் சாசன மும், மாநில சுயாட்சித் தத்துவமும் என்ற தலைப்பில் எஸ்.கண்ணன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் சாசனத்தில் இந்திய ஒன்றியம் மாநிலங்கள் அதிகாரப் பகிர்வுக்கு வழி செய்வதாக உள் ளது. எனினும் மத்திய அரசு பட்டிய லில் உள்ள அதிகாரங்கள் எண் ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இசைவு பட்டியலிலும், மாநிலப் பட்டி யலிலும் அதிகாரங்களின் எண் ணிக்கை குறைக்கப்படுகிறது.  மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்த கட்சிகள் நவீன தாராளமய  காலத்தில் தேசியத் தன்மையுடன் செயல்படும் நிலைக்கு செல்கின் றன. தற்போது கார்ப்பரேட் முதலா ளிகள் நலனை அடிப்படையாகக் கொண்ட தாராளமயக் கொள்கை மற் றும் இந்துத்துவ வகுப்புவாதக் கொள்கை இரண்டையும் பின்பற்றும்  பாஜக ஆட்சிக் காலத்தில் மாநில சுயாட்சிக் கொள்கை கடும் தாக்குத லுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வாறு  எஸ்.கண்ணன் கூறினார். இந்த வகுப் பில் திரளானோர் கலந்து கொண் டனர்.