districts

img

வெறுப்பரசியலை வேரறுப்போம்: சிபிஎம் அறைகூவல்

கோவை, ஆக.16- மக்கள் ஒற்றுமையை உயர்த்தி  பிடித்து, வெறுப்பரசியலை வேரறுப் போம் என செவ்வாயன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. நாடு முழுவதும் 76 ஆவது சுதந்திர தினம் செவ்வாயன்று கொண்டாடப் பட்டது. கோவையில் பல்வேறு மையங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது. அதன்படி, சிபிஎம் கோவை  மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சி யின் மையக்கிளைச் செயலாளர் என்.ஜெயபால் தலைமையில் சுதந்திர தின  விழா கொண்டாடப்பட்டது. அலுவலக செயலாளர் ராமசுப்பு வரவேற்றார். தேசியக்கொடியினை கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஏற்றி வைத்தார். கட்சிக்கொடியினை முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளியங்கிரி ஏற்றி வைத்தார். மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்வில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகையில், அளப்பரிய தியா கம் செய்து நாடு விடுதலை பெற்றது. அதில் கம்யூனிஸ்டுகள் பங்கு மகத்தான தாகும். ஆனால், இன்று விடுதலை  போராட்டத்திற்கு எந்த தொடர்பும் இல் லாதவர்கள் கையில் தேசத்தின் ஆட்சி  அதிகாரம் உள்ளது. அதனால் தான்  மணிப்பூரில் மக்கள் ஒற்றுமை சிதை வதை அவர்கள் கன்டுகொள்ள மறுக்கி றார்கள். தேச விடுதலை போரின் பாரம் பரியத்தை இன்று முன்னெடுக்க வேண் டும். மக்கள் ஒற்றுமையை உயர்த்தி  பிடித்து வெறுப்பரசியலை வேரறுக்க வேண்டும். அந்த மகத்தான கடமை  நாட்டு மக்கள் அனைவருக்கும் உள் ளது, என்றார். முடிவில், கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ் நன்றி கூறி னார். அதேபோல, கோவை, தண்ணீர்பந் தல் பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின  விழா நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச்  செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சுதந் திர தின விழா நிகழ்ச்சிகளில் சிபிஎம், சிஐடியு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் பூங்கா சாலையில் சிஐ டியு, விவசாய சங்கம், விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் 76 ஆவது சுதந் திர தின விழா உறுதி ஏற்பு நிகழ்ச்சி மற் றும் தர்ணா நடைபெற்றது. இந்நிகழ் விற்கு சிஐடியு அசோகன் தலைமை  வகித்தார். “இந்திய தேசம் விற்பனைக்கு அல்ல, பெற்ற சுதந்திரத்தை பாதுகாப் போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் ஆர். சிங்காரவேலு, மாவட்டச் செயலாளர் ந. வேலுச்சாமி, விதொச மாவட்டச் செயலா ளர் பி.சபாபதி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் எம்.ரங்கசாமி உட்பட விவ சாயத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

76 ஆவது சுதந்திர தினத்தை முன் னிட்டு கொடியேற்று விழா, கொண்டாட் டங்கள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நகரச் செயலாளர் பி. சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற  விழாவில், தேசிய கொடியை மூத்த தோழர் கே.துரைராஜ் ஏற்றி வைத்தார். இதில், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், செயற்குழு உறுப்பினர் ஆர். கோமதி, மா.அண்ணாதுரை, சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.