districts

img

குழந்தை திருமணத்தை தடுக்க பெண் கல்வியை ஊக்குவிப்போம்

சேலம், அக்.29- குழந்தை திருமணத்தைத் தடுக்க மாணவர்களிடையே மட்டுமல்லா மல்  பெற்றோர்களிடையேயும் விழிப் புணர்வு உருவாக்க வேண்டும்.  பெண் கல்வியை ஊக்குவிக்க  வேண்டும் என பெரியர் பல்கலைக் கழக துணைவேந்தர் இரா.ஜெக நாதன் வலியுறுத்தியுள்ளார். பெரி யார் பல்கலைக்கழக இதழியல் மற் றும் மக்கள் தொடர்பியல் துறை தமிழ் நாடு அரசின் சமூகநலத்துறை, யூனி செப், சென்னையின் தோழமை தன் னார்வ அமைப்புடன் இணைந்து  குழந்தைகளுக்கு எதிரான வன் முறைகளையும், குழந்தை திரும ணத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் இளம் வழக்காடிகளை ஊக்கு விக்கும் உரையாடல் என்ற தலைப்பி லான ஒரு நாள் பயிலரங்கம் வியாழ னன்று நடைபெற்றது.  இப்பயிலரங்கில் பெரியார் பல் கலைக்கழக துணைவேந்தர் இரா. ஜெகநாதன் பேசுகையில், பெண் கல் வியை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைத் திருமணத்தை தடுக்க முடியும் என்பதுடன், பெண் தொழிலா ளர்கள் இல்லாத அறிவுசார் தளத்தில் அவர்கள் இயங்குவதற்கான வள மான சூழலை உருவாக்க முடியும். தற்கால இளையோர்கள் சமூக ஊட கங்களை பயனுள்ள வகையில் அவர் களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே  பயன்படுத்த வேண்டும். தேவை யற்ற தகவல்களை பரிமாற்றுவதன் மூலம் பல சிக்கல்கள் உருவாகும். இச்சிக்கலில் இருந்து குழந்தைகள் விடுபட முதலில் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டி யது முதன்மையானக் கடமையாக உள்ளது. எனவே இது போன்ற பயில ரங்கில் பங்கேற்றுள்ள மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில் குமார் பேசுகையில், குழந் தைகளுக்கு எதிரான வன்முறை களின் தற்போதைய நிலையை எடுத்துரைத்து, குழுந்தைகள் நலனை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெற்றோர்களும், களத் தில் உள்ள அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பெண் குழந்தை திருமணம் என்னும் நிகழ்வைத் தடுத்து விட முடியும். இது  நமது சமூக கடமையும் கூட என்ப தனை அனைவரும் உணர வேண் டும். தமிழ்நாடு அரசு குழந்தைகள் நேய அரசாக செயல்பட்டு வருகி றது. படிப்பதற்கான இட ஒதுக்கீட்டு உரிமை, முதல் பெண்களின் சுயமரி யாதை ,சுயவாழ்வுக்கான சொத்து ரிமை போன்றவற்றை நிலைநாட்டிய தில் திராவிட இயக்கத்திற்கு பெரும் பங்குண்டு, என்றார். முன்னதாக நிகழ்வின்  அறிமுக உரையாற்றிய சென்னை தோழமை அமைப்பின் இயக்குநர் அ. தேவநேயன் பேசு கையில், இது போன்ற பயிலரங்கு கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடப்பதைத் தடுப்ப தற்கான தொடர் நடவடிக்கைகளாக இருக்கும் என்றார் இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் என்.ரஞ்சிதா தேவி,  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூ கப் பணிகள் துறையின் தலைவர் லூர்து மேரி, குழுந்தைகள் பாது காப்பு அதிகாரி டி.லாவண்யா கிரேஸ், குழந்தைகள் நல உரிமை மற்றும் முன்னேற்ற மையத்தின் இயக்குநர் ஸ்டெக்னா ஜென்சி, தமிழ் நாடு திட்டக்குழுவின் ஆண்ட்ரு சேசு ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இணை பேராசிரியர் இரா.சுப்பி ரமணி நன்றி கூறினார்.