districts

img

மோடி அரசை தோல்வியடையச்செய்வோம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு

நாமக்கல், பிப்.13 மோடி அரசுக்கு எதிராக வரும் நாடா ளுமன்ற தேர்தலில் கருத்து பிரச்சா ரத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக்  குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் நாமக் கல்லில் நடைபெற்றது. இதில் மாநிலக்  தலைவர் கே முகமது அலி தலைமை  வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண் முகம் கூட்டத்தில் பங்கேற்றார். இதில், விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒன் றிய மோடி அரசின் உண்மை முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகை யில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசு தோல்வி அடையச் செய்ய வேண் டும் என்ற அடிப்படையில்,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார் பில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்து  பிரச்சாரங்கள் செய்வது, பால் கூட்டு றவு அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தான தொடர் பிரச்சாரம் இயக்கங் களை நடத்துவது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் பால் உற்பத்தியாளர்கள் சங் கத்தின் மாநில பொதுச் செயலாளர் படைவீடு பி.பெருமாள், மாநிலப் பொரு ளாளர் ஏ.எம்.முனுசாமி, மற்றும்  9 மாவட் டங்களில் இருந்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தின் நிறைவில் வாச்சாத்தி பழங் குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட வன் கொடுமைகளை எதிர்த்து நீதிமன்றத் தில் முன் நின்று போராடி வெற்றி கண்ட,  தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர்  சுடர் விருது பெற்ற பெ.சண்முகத் திற்கு, சிபிஎம் திருச்செங்கோடு வழக்க றிஞர்கள் அரங்ககிளையின்  சார்பாக,  பொன்னாடை மற்றும் நினைவு பரிசு  வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில்,  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.சேகரன்,  வழக்கறிஞர் மாரிமுத்து மற்றும் வழக்க றிஞர் க.கோபி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.