districts

img

இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சூளுரை

நாமக்கல், ஏப்.6- இந்தியா கூட்டணியை வெற்றி பெற  வைப்போம் என திருச்செங்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில், சுமை தூக்கும்  தொழிலாளர்கள் சூளுரைத்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் பேசுகையில், நாமக்கல் மக்க ளவை தொகுதியில் இந்தியா கூட்டணி  சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனநாயகம் தழைக்கவும், மக்கள் விரோத பாஜக அரசை வீழ்த்தவும் வி. எஸ்.மாதேஸ்வரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற வைக்க வேண்டும், என்றார். இதை யடுத்து அங்கு குழுமியிருந்த தொழிலா ளர்கள் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம் என சூளுரைத்தனர். இந்நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அன் புமணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.நடேசன், நகரச் செய லாளர் டி.கார்த்திகேயன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.