உடுமலை, செப். 9- சாதி,மத சிந்தனை வளர்வதால் மனி தனின் மரணத்தையும் கொண்டாடும் மனநிலையை உருவாக்கிறார்கள், சனா தனம் பேசி மனித தலைக்கு விலை வைக் கும் கயவர்களை புறக்கணிக்க வேண் டும் என கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 8 ஆவது மாநில மாநாடு உடுமலையில் நடை பெற்றது. இம்மாநாட்டின் ஒருபகுதி யாக திறந்தவெளி கருந்தரங்கம் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மாற்றத்தை நோக்கி பயணிப்போம் என்கிற தலைப்பில்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம், கல்வியும் வேலைவாய்ப்புப் எங்கே? என்கிற தலைப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில், கவிஞர் மதுக்கூர் ராமலிங் கம் பேசுகையில், பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்கிறார் வள்ளலார்.சாதிய மத அடிப்படையில் வாழ வேண் டும் என்கிற சனாதனத்தை புறந்தள்ளி புதிய மாற்றத்தை நோக்கி பயணிப் போம் என்பதே அதன்பொருள். ஒன்றிய மோடி அரசு பதவிக்கு வந்தால் புதிய நாடு பிறக்கும் என்றார்கள்.
ஆனால், அவர் நாட்டின் பெயரை மாற்ற முயற்சிக் கிறார். மக்களிடையே சாதி மற்றும் மத சிந்தனைகளை வளர்ந்து விடுவதால் ஒரு மனிதனின் மரணத்தையும் கொண் டாடும் மனநிலையை உருவாக்கிறார் கள். இதன் தொடர்ச்சிதான் உடல்நிலை குறைவால் இறந்த நடிகர் மாரிமுத்து விற்கு எதிராக கருத்துகள் வருகிறது. இதுபோன்ற கருத்துக்களை வன்மை யாக கண்டிக்க வேண்டியது அவசியம். சந்திரனுக்கு ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பியதை கொண்டாடும்போது, மோடி அதை உரிமை கொண்டாடும் வகையில் புதிய பெயர் வைப்பது மாற் றத்தை உருவாக்காது. ஐஐடி என்ற உயர் கல்வி நிலையம் இருக்கும் போது நம் பிள்ளைகள் இன் றும் ஐடிஐயில்தான் படிக்க முடியும் என் கிற நிலைதான் உள்ளது. அனைவருக் கும் சமமான தரமான விரும்பிய கல்வி கிடைக்க கல்வி கொள்கையில் மாற் றத்தை கொண்டு வரவேண்டும். படித்த வர்கள் எல்லாம் அறிவு உள்ளவர் என்று இல்லை. இதே ஐஐடியின் ஆசிரியர் விலங்குகளை உண்பதால் தான், இயற்கை அழிவு ஏற்படுகிறது என் கிறார். மாற்றத்தை விரும்பாத இது போன்ற நபர்களிடம்தான் நாடு உள் ளது. அனைவருக்கும் சமத்துவத்தை யும் பயத்தையும் ஏற்படுத்திய கொரோனா காலத்தில், தனியார் நிறுவ னங்கள் மற்றும் மருத்துவமனைகள் உதவ முன் வரவில்லை. அன்றைய காலத்தில் நமக்கு உறுதுணையாக இருந்து காப்பற்றியது அரசு நிறுவனங் கள் மட்டும்தான். மக்களை கொள்ளை அடிக்க மட்டுமே தனியார் நிறுவனங்கள் இருக்கும்.
ஆன்மிகம் என்ற பெயரில் மனித இனத்திற்கு எதிராக இருப்பவர்களை ஏற்காமல் இதே மண்ணில் மக்களுக் காக வாழ்ந்த வள்ளலார் உள்ளிட்டோ ரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம். இதுபோன்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ளாமல் சனாதனம் பேசி, மனித தலைக்கு விலை வைக்கும் கயவர்களை புறக்கணிப் போம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடை யில் இருக்கும் வாழ்க்கையை பயன் உள்ளவகையில், நாம், அனைவரையும் மகிழ்சியுடன் வாழவும், சாதி மதம் பாகுபாடு பார்க்காமல் சாதிக்க வேண் டும் என்ற மனநிலையில் மாற்றத்தை நோக்கு பயணிப்போம் என்றார். இதனைத்தொடர்ந்து, ஜி. செல்வா பேசுகையில், போராட்டம் நடத்தினால் வெற்றி பெறலாம் என பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தியது சாலைப் பணியாளர் சங்கம். நம்முடைய கல்வி மற்றும் வேலைகள் பறிபோவதை அனைவரும் இணைந்த போராட்டத் தால் மட்டுமே மீட்க முடியும். நாட்டின் வளங்களையும் தனி நபர் ஒழுக்கத்தை தர வேண்டிய கல்வியை, வருவாய் ஏற்படுத்தும் நிறுவனமாகவும், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் வகையில் மோடி அரசின் புதிய கல்வி கொள்கை உள்ளது. மக்களுக்கு பயன்படாத இந்த புதிய கல்வி கொள் கையை தமிழக அரசு எதிர்ப்பதை வர வேற்க்கிறோம். நிலாவை காட்டி, உணவு ஊட்டிய காலம் சென்று விட் டது.
இன்று நிலாவில் சந்திராயன் உள் ளது. இதற்கு காரணமான கல்வி முறை மாற்றுவது நமது கடமை. உயர் கல்வி நிலையமான ஐஐடி யில் பல மாண வர்கள் சாதிய பாகுபாட்டால் தற் கொலை செய்வதும், மருந்துப்படிப்பில் நீட் தேர்வு என்பது தங்களுடைய பிள் ளைகளுக்கு விரும்பிய படிப்பை தரமு டியாமல் பொற்றோர் தற்கொலை செய் வதை தடுக்க வேண்டும். 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டில் நாட்டில் ஒரு சதவீத ஜிடிபி வளர்ச்சிக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைத்த நிலையில், 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு சதவீத ஜிடிபி வளர்ச்சிக்கு ஐம் பதாயிரம் வேலை வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. தற்போது, முழுமையாக எந்த வேலை வாய்ப்பும் இல்லாமல் நாடு வளச்சி பெற்றதாக வாய் சவடால் செய் கிறது மோடி அரசு. சாதிக்குரிய வேலையை செய்ய வேண்டும் என்று சொல்வது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட் டின் தேச விரோத கட்சி என்றால் அது பாஜகதான். மக்களை சாதியாகவும் மத மாகவும் பிரித்து அறிவியல் கல்விகளை கற்க விடாமல் புராணக்கதைகளை வர லாறாக பிரச்சாரம் செய்கிறது. இதனை தடுக்கவும் நம் பிள்ளைகளுக்கு தர மான கல்வி மற்றும் சமூக பாதுகாப்பான வேலை கிடைக்க வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்யும் பணியாளர்கள் உள்ளிட்ட நாம் அனைவரும் இணைந்த போராட் டத்தின் மூலமே இதனை சாதிக்க முடியும் என்றார்.