districts

img

பெண் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் பாஜகவை தோற்கடிப்போம்

தருமபுரி, மார்ச் 8- பெண்களை அடிமைகளாக வர் ணித்துள்ள சனாதனத்தை கடைபிடிக் கும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்  என சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன் அழைப்பு விடுத்துள் ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில், தருமபுரி தொலைபேசி நிலை யம் முன்பு தெருமுனை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். அப்போது சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில், ஆண்களுக்கு சமமான  கூலி பெண்களுக்கு வழங்க வேண்டும்  என 1908 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் பல ஆயிரம் பெண்கள் திரண்டு போராடினர். இதன்பின் 1910 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது. 18 நாடுகளில் இருந்து  117 பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற  அந்த மாநாட்டில், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் எடுத்துரைக் கப்பட்டன. இதைத்தொடர்ந்து மார்ச் 8  ஆம் தேதியன்று நடைபெற்ற போராட் டத்தின் விளைவாக, சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது.  உலகளவில் பெண்கள் சந்திக்கும்  பிரச்சனைகளைவிட, இந்தியாவில் அதிகளவில் பெண்கள் பிரச்சனை களை சந்திக்கின்றனர். இந்தியாவில் பெண்களை இரண்டாம்தரமாக பார்க் கின்றனர். மனுஸ்மிருதியில் ஆண்க ளுக்கு பெண்கள் அடிமையாக இருக்க  வேண்டும். பெண்கள் மோகம் கொண்ட வள், வஞ்சகமானவள் என மோசமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பெண்களை அடிமையாக நினைக் கின்ற, உரிமைகளை பறிக்கின்ற மனுஸ் மிருயை ஏற்று செயல்படுவது ஆர்எஸ் எஸ். இதை அமல்படுத்துவது பாஜக. இதை வழிநடத்துபவர் பிரதமர் மோடி. எனவே, சனாதனத்தை கடைபிடிக்கிற பாஜக, தீண்டாமையையும், பெண் அடிமைத்தனத்தை கடைபிடிக்கிறது. இந்த சனாதன அரசை தோற்கடிக்க வேண்டும். இந்திய இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பாது காக்க வேண்டும், என்றார். இக்கூட்டத் தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர்.மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.