சேலம், மார்ச் 8- வெறுப்பு அரசியலை முறியடிப் போம் என்கிற முழக்கத்துடன் மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர குழுவினர் மாநகரத்தில் பல்வேறு இடங் களில் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலா ளர்கள் தாக்கப்படுவதாக, பாஜகவினர் வதந்தியை பரப்பினர். இது சமூக வலை தளங்களில் வைரலானதால், தமிழ்நாட் டிலுள்ள வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதனை தடுக்கும் வகையில் வடமாநில மக்களையும், தமிழ் நாட்டு மக்களையும் மோதவிட்டு குளிர் காய நினைக்கும் மதவெறி, பிரிவினை வாத கும்பலை தனிமைபடுத்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் ஆலமரக் காடு, வீரபாண்டியார் நகர், ரெட்டியூர், சிவாயநகர் பகுதியில் தமிழ் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசு ரம் வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சிபிஎம் வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தை வேல் எம்.சேது மாதவன், வாலிபர் சங்க வடக்கு மாநகர செயலாளர் குரு பிர சன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.