தருமபுரி, ஜன.14- தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மரக் கன்றுகளை நட்டு வைத்து, அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர் களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்கள். தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப் பைகளை மீண்டும் பயன்படுத்த வலியு றுத்தி மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் சு.இராமதாஸ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.