districts

img

சாதிய பாகுபாடுகளை கைவிடுவோம் - சிபிஎம் பிரச்சாரம்

ஈரோடு, ஜூலை 11- சாதிய பாகுபாடுகளை கைவிடுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எழுமாத்தூரில் பிரச்சார இயக் கம் நடைபெற்றது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டிய லின ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி  செய்ய வேண்டும். எழுமாத்தூர், ஆனந்தம் பாளையம் கிராமங்களில் இலவச வீட்டு மனை பட்டா கோரி விண்ணப்பித்தவர்க ளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். சாதி ஆணவப்படுகொலைகள் மற்றும் குற்றங் களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்கள் மற்றும் நிபந்தனை நிலங் களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஐஐடி, ஐஐஎம்களில் பிற்படுத்தப் பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினருக் கான இடங்கள் ஒவ்வோரு ஆண்டும் பறிக்கப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் இப்பிரச்சார இயக்கத் தில் முன்வைக்கப்பட்டன.  முன்னதாக, பிரச்சார இயக்கத்திற்கு கொடுமுடி - மொடக்குறிச்சி தாலுகா குழு உறுப்பினர் டி.தங்கவேல் தலைமை ஏற்றார்.  இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி, தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவாக எம்.அண்ணா துரை நன்றி கூறினார்.