districts

img

உதகையில் சட்ட மன்ற பொது கணக்குக்குழு ஆய்வு

நீலகிரி, ஜூன் 17- உதகையில், சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு வினர் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவை பொது கணக்குக்குழுவின் தலைவர் கு.செல்வ பெருந்தகை தலைமையில்,  சட்டமன்ற உறுப்பினர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈஸ்வரன், சரஸ்வதி,  நத்தம் விஸ்வநாதன், சேகர், கிருஷ்ணசாமி ஆகியோர் கள  ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, ஊட்டியில் டேவிஸ் பூங்கா, உழவர் சந்தையை பார்வையிட்டு, வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.  பின்னர், ஊட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, புதிதாக கட்டப்பட்ட கட்டடத் தில் விரிசல் ஏற்பட்டதை பார்த்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர்.  இதையடுத்து, பார்சன்ஸ் வேலி, சிங்கார மின் நிலையம்,  மசினகுடி பஜார், தெப்பக்காடு பகுதிகளை பார்வை யிட்டனர்.  இதுகுறித்து தலைவர் கு.செல்வபெருந்தகை செய்தி யாளர்களிடம் கூறுகையில், ஊட்டியில் உள்ள பூங்காக்கள், உழவர் சந்தை, தாலுகா அலுவலகங்களில் கள  ஆய்வு மேற் கொண்டோம்.  பிற இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட  உள்ளது. கள  ஆய்வுக்கு பின், எடுக்கப்பட்டுள்ள நடவ டிக்கை குறித்து தெரிவிக்கிறோம். அதன்பின் நடக்கும் ஆய்வு  கூட்டத்தில் சில முடிவுகளை அறிவிக்க உள்ளோம், என் றார்.