தருமபுரி, ஏப்.14- சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஞாயி றன்று சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சட்டமாமேதை டாக்டர் அம் பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி அரசு மருத் துவமனை அருகே உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். இதில் கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸா மேரி, ஆர்.மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி, ஏ. ஜெயா, மாதர் சங்க நிர்வாகிகள் பி. கிருஷ்ணவேணி, நிர்மலா ராணி, மீனாட்சி, சுசிலா, சுபா உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோன்று கடத்தூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட் டச் செயலாளர் தி.வ.தனுஷன், வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் குறளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குப்பன், தலைவர் சினேகா உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். இதேபோன்று தருமபுரி திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந் தநாள் முன்னிட்டு, வேளாண் மற் றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், சமத்துவநாள் உறு திமொழி ஏற்கப்பட்டது. இதில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பழனியப் பன், காங்கிரஸ் மாவட்டத் தலை வர் தீர்த்தராமன், சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், விசிக மண் டலச் செயலாளர் தமிழ்அன்வர், திமுக தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.கே. தருன், வர்த்தகர் அணி துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, நகரச் செயலாளர் நாட்டான் மாது உட் பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்த நாள் விழா நடை பெற்றது. இதையொட்டி தீண் டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப் பட்டது. திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ஈஸ்வரன் எம்எல்ஏ, திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந் தில், திருச்செங்கோடு நகர்மன் றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், குமா ரபாளையம் பகுதியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் விடியல் ஆரம்பம் பவுண்டேசன் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவில் வினாடி வினா போட்டிகள் நடத்தி, அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.