districts

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 27- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கை களைக் கண்டித்து இடதுசாரி மற்றும் விசிக சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண் டர் விலை கடுமையாக உயர்வு, கட்டுக் கடங் காத விலைவாசி உயர்வு, வேலையின்மை,  எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்ப் பது, மூலப்பொருட்களின் விலை பல மடங்கு  உயர்வால் சிறுகுறு தொழில்கள் நெருக்கடி போன்ற ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவ டிக்கையை கண்டித்து சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கள் சார்பில் தமிழகம் முழுவதும் மே 25 ஆம்  தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.  இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருக ராஜ், நகர செயலாளர் சுந்தரம், விசிக மாவட்ட  பொறுப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஒன் றிய செயலாளர் வெங்கடேசன், சதீஸ் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.பாலு, நகரச் செயலாளர் வணங்காமுடி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோ கன், என்.வேலுசாமி, கே.தங்கமணி, பி.ஜெய மணி, சு.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து  தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸா மேரி, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட துணை செயலாளர் தமிழ் குமரன், நிர்வாகி ஆர்.சுதர்சனம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் த.கு.பாண்டியன், தொகுதி செயலாளர் சக்தி, நகரசெயலாளர் ராமதுரை, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்  லிபரேசன்) மாவட்ட செயலாளர் கோவிந்த ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் சி.முருகன் ஆகியோர் பேசினர். நல்லம்பள்ளி இந்தியன் வங்கி முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.குப்புசாமி, கே.எல்லப்பன் மற்றும் அந்தோனிராஜ், பி.ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கோட்டை கலைவாணன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியூன் நிர்வாகி ஜெ.பிரதாபன் ஆகியோர் பேசினர். இண்டூர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி நிர்வாகி சின்னசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.மாதேஸ்வரன், ஒன்றிய செயலாளர் சிவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன், பகுதி குழு செயலாளர் சிவப்பிரகாசம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் ஒன்றிய செயலாளர் சந்தான மூர்த்தி ஆகி யோர் பேசினர். பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலா ளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்தி ரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் மகாதேவன், வட்டதுணை செய லாளர் மாதப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் ஆகி யோர் பேசினர்.

காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் வழக்கறிஞர் டி.மாதையன், விடுதலைச் சிறுத்தைகள் நகரசெயலாளர் அம்பேத் ஆகி யோர் பேசினர். கடத்தூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் நிர்வாகி பாலையா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து சிறப்புரை யாற்றினார். கம்பை நல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டகுழு உறுப்பினர் மாதேஷ் தலைமை வகித் தார். பொம்மிடி பேருந்து நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட்  கட்சி யின் வட்டகுழு உறுப்பினர் தீர்த்தகிரி தலைமை  வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் நகர செயலாளர் கனகராஜ் ஆகியோர் பேசினர். பாப்பிரெட்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டசெயலாளர் தனு சன்‌ தலைமைவகித்தார். மாவட்டக்குழு உறுப் பினர் சி.வஞ்சி மற்றும் டி.சேகர், மேகநாதன், அம்புரோஸ், கிருஷ்ணவேணி ஆகியோர் பேசி னர்.

மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.தங்க ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன், ஆர்.மல் லிகா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன் றிய செயலாளர் கலைவாணன், ஒன்றிய கவுன் சிலர் தருமன் ஆகியோர் பேசினர். அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கி.ஜானகி ராமன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, ஒன்றிய  செயலாளர் பி.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட துணை செயலாளர் காசி.தமிழ் குமரன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றிய செய லாளர் மூவேந்தன், ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாரதிராஜா ஆகியோர் பேசி னர். ஈரோடு ஈரோடு சூரம்பட்டி ரோடு பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர செயலா ளர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ். சுப்பிரமணியன், நகர கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.ரங்கநாதன், வை.பாண்டியன், சிபிஐ ஈரோடு வட்டார செயலாளர் டி.சோமசுந்தரம், வி.செல்வராஜன், மாவட்ட பொருளாளர் எஸ். டி.பிரபாகரன், வட்டார பொருளாளர் என்.ரமணி, வி.சி.க மாநில துணை செயலாளர் எஸ். எம்.சாதிக், நகர தலைவர் மு.அம்ஜத் கான், மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜாபர் அலி, செய்தி தொடர்பாளர் பை ஜோஸ் அஹமது  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட செய லாளர் அம்பேத்கர் தலைமை வகித்தார். கோபி  நகர செயலாளர் மாணிக்கம், ஒன்றிய செயலா ளர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.முனுசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, தாலுகா செயலாளர் ச.யுவராஜ், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பர மேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கனகராஜ், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், பவானி-அந்தியூர் பிரிவில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் சார்பில் பவானி தாலுகா செயலாளர்  எஸ்.மாணிக்கம், சிபிஐ ஒன்றிய செயலாளர்  கே.எம்.கோபால், விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தொகுதி செயலாளர் இல.ஆற்றலரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, சிபிஐ மாவட்ட  நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ப.பா. மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநிலத் துணைச் செயலாளர் சௌ. பாவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பெ.ச.சிறுத்தை வள்ளுவன், விசிக மாவட் டச் செயலாளர் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயரா வன் சிறப்புரையாற்றினார். சிபிஐ வழக்கறி ஞர் எம்.எஸ்.கிருஷ்ணகுமார், விசிக தொகுதிச் செயலாளர் கா.வெற்றிச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர். நம்பியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் கே.சி.ரங்கசாமி, விசிக ஒன்றிய பொறுப்பாளர் மண்ட பம் மாரியப்பன், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பி னர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்த னர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, விசிக மாவட்ட பொருளாளர் மிசா  தங்கவேல், சிபிஐ ஒன்றிய செயலாளர் கே. சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

சத்தியமங்கலம் சிபிஐ வடக்கு மாவட்ட நிர் வாகக் குழு உறுப்பினர் ரா.ஸ்டாலின் சிவக் குமார், சிபிஎம் தாலுகா செயலாளர் கே.எம். விஜயகுமார், விசிக மாநில துணை செயலா ளர் வழக்கறிஞர் பிரிவு துரை இளங்கோவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கா.இரா.திருத்தணிகாசலம் சிறப்புரை ஆற்றினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர், விசிக தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கருமாண்டாம் பாளையம் பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்  மொடக் குறிச்சி கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி. கனகவேல் தலைமை வகித்தார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், கொடுமுடி நகர செய லாளர் ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கொடுமுடி பழனிச் சாமி ஆகிய தோழர்கள் கண்டன உரை நிகழ்த்தி னார். இந்நிகழ்வில் சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க உள்ளிட்ட கட்சி தோழர்கள் பங்கெடுத்தனர்.