districts

img

விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொடர்ந்து போராடும்

சேலம், ஏப்.22- விவசாயிகளை ஏமாற் றும் மோடி அரசைக் கண் டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொடர்ந்து போரா டும் என சேலத்தில் நடை பெற்ற சிறப்பு கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர்கள் சூளுரைத்தனர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம்  மாவட்டக்குழு அலுவலகத் தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருந்தரங்கில் விவசாய சங்க தலைவர் கள் பேசுகையில், ஒன்றிய மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களைத் திரும் பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத் திய வரலாறு காணாத போராட்டம் ஓராண் டாக நடைபெற்றது. இதையடுத்து வேளாண்  விரோத சட்டங்கள் அமல்படுத்த மாட்டாது என மோடி அரசு ஒப்புக்கொண்டது. இதைய டுத்து கடந்த ஆண்டு டிச.11 ஆம் தேதி  தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப் படும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி தெரிவித்தது. ஆனால், விளை பொருட்க ளுக்கு ஆதாரவிலை உள்ளிட்ட ஒன்றிய அரசு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆதாரவிலை நிர்ண யம் செய்ய தயாராகவும் இல்லை. மாறாக பொத்தாம் பொதுவாக இடுபொருள் செலவு, கூலி என கணக்கிட்டு நிர்ணயம் செய்ய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.  இது விவசாயிகளை ஏமாற்றும் செயலா கும். இதனைக் கண்டித்து ஐக்கிய விவசாயி கள் முன்னணி தொடர்ந்து போராடும், என்ற னர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் கே.பி. பெருமாள், மாநில செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், சந்திர போஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயல்பாட்டுக்குழு நிர்வாகிகள் கே.செல்வராஜ், கவிதா, கண பதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ. மோகன் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.