districts

img

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு  திருப்பூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 13 - இந்திய நாட்டு மக்களை மதரீதியில் பிளவு படுத்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை, தேர்தல் நேரத்தில் அவசர கதியில் அமல்ப டுத்தும் ஒன்றிய பாரதிய ஜனதா அரசை கண் டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட் டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தின் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில  இந்திய வழக்கறிஞர சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் மூத்த வழக்கறிஞர் கே. சுப்பராயன் தலைமை வகித்தார். இந்திய நாட் டின் அரசியல் சட்டத்தை சீர்குலைத்து,  மதரீ தியில் மக்களைப் பிளவுபடுத்தி, ஒற்று மையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்தச்  சட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத் தியும், தேர்தல் நேரத்தில் அவசர கதியில் இச் சட்டத்தை அமலாக்க உத்தரவு பிறப்பித்த ஒன் றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வழக்க றிஞர்கள் முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய  வழக்கறிஞர்கள் சங்க மாவட்டப் பொருளாளர்  ஓ.உதயசூரியன், திமுக வழக்கறிஞர் அணி  மாவட்ட அமைப்பாளர் எம்.பார்த்திபன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் அ.மணவாளன், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.பொன்ராம் ஆகி யோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறி ஞர்கள் பி.ராஜேந்திரன், எம்.சையத் இப்ரா ஹிம், வி.ஆனந்தன், குணசேகரன், இந்திய  வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி எஸ்.பி.கோபி நாத் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் உள்பட  திருப்பூர் வழக்கறிஞர்கள் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.