நாமக்கல், ஏப்.4- வழக்கறிஞர்களை தரக்குறை வாக பேசியவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி திருங்செங்கோடு நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்க ணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் பொன்மணி. இவர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி யன்று தனது வழக்கமான வழக்குப் பணிகளுக்காக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திற்கு சென்று வரும் வழியில் நின்றிருந்த, திருச் செங்கோடு தாலுகாவைச் சேர்ந்த சங்கர், மொளசி பகுதியைச் சேர்ந்த நவநீதன் ஆகியோர், வழக்கறிஞர் களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை வழக்கறி ஞர் பொன்மணி கண்டித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் திருச் செங்கோடு வழக்கறிஞர் சங்கத் தில் புகாரளித்துள்ளார். அதுதொ டர்பாக ஆலோசனை செய்த சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ராஜேஷ் கண்ணனை நேரில் சந்தித்து புகார் அளித்துள் ளனர். இந்த புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியதன்பேரில், திருச்செங் கோடு நகர காவல் நிலையத்தில் புகா ரளிக்கப்பட்டது. ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் காலம் கடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து ஏப்.4 ஆம் தேதியன்று காலவரை யற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபடுவது என வழக்கறி ஞர்கள் கூட்டுக்குழு முடிவு செய்தது. அதன்படி வியாழனன்று வழக்கறி ஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடு பட்டனர். இதுகுறித்து குற்றவியல் வழக்க றிஞர்கள் சங்கத்தின் தலைவர் சரவ ணராஜ் கூறுகையில், சங்கர் மற்றும் நவநீதன் ஆகிய இருவரும் அதிகாரி களை மிரட்டுவதும், கட்டப்பஞ்சா யத்து செய்வதும், அரசு அலுவல கங்களில் பல்வேறு வேலைகளை முடித்துக் கொடுக்கிறேன் என்று பணம் பெறுவது உள்ளிட்ட செயல் களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எங்களது வழக்கறிஞர் நகர காவல் நிலையத்திற்கு சென்று திரும்பும் போது, வழக்கறிஞர்கள் பற்றி தரக் குறைவாக பேசியுள்ளனர். இது குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாரளித்தும், எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த இருவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இதற்கு காவல் துறையினர் தக்க நட வடிக்கை எடுக்காவிட்டால், எங்க ளது மாவட்ட வழக்கறிஞர்கள் கூட் டுக்குழு மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார் பாக முடிவெடுத்து அவர்களது வழி காட்டுதலின்படி போராட்டம் தொட ரும், என்றார். இப்போராட்டத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 87 பேரும், உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 53 பேரும் என 140க் கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடு பட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது.