districts

img

இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள்

இஸ்ரேல் நாட்டின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மாசேதுங், மாவட்டச் செயலாளர் ஜோதிகுமார், தேசியகுழு உறுப்பினர் ஆனந்தன், கோவை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி, பியுசிஎல் தேசிய  செயலாளர் பாலமுருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கோபால்  சங்கர், சுந்தரமூர்த்தி, டி.சுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட   வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.