சேலம், ஆக.31- 3 சட்டங்களின் பெயரை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி யில் மாற்றம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் உள் ளிட்ட 3 பிரதான சட்டங்களின் பெயர்கள், இந்தி மற்றும் சமஸ் கிருத மொழியில் மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில், மூத்த வழக் கறிஞரும், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான பொன்.ரமணி, சேலம் மாநகராட்சி கவுன்சிலரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளருமான ஜே.இமய வரம்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக் கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.