districts

img

மடத்துக்குளத்தில் நிலம் அடையாளம் காணும் பணிகள் துவக்கம்: சிபிஎம்- யின் 6 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

உடுமலை, டிச.26- ஏழை மக்களுக்கு வருவாய்த்து றையின் சார்பில் வழங்கப்பட்ட பட்டா விற்கான இடம் நீண்ட காலமாக ஒதுக் கப்பாடாமல் இருந்தது. நிர்வாகத் தின் இந்த போக்கை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளை வாக மடத்துக்குளம் வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாயன்று நிலம் அளவிடும் பணிகளை துவக்கி யுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்கு ளம் தாலுக்கா கொமரலிங்கம் பகு தியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 110க் கும் மேற்பட்டவர்களுக்கு வரு வாய்த்துறை சார்பில் இலவச வீட்டு  மனை பட்ட வழங்கப்பட்டது. ஆனால்  வழங்கிய பட்டாவிற்கான இடம்  ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பட் டாவின் படி இடம் ஒதுக்கி தரக்  கோரி வட்டாட்சியர் முதல் வரு வாய்த்துறையில் உள்ள அனைத்து  பிரிவுகளிலும் பட்டா பெற்ற மக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த வருடம்  உடுமலை கோட்டாட்சியர் அலுவல கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர். அப்போது, வருவாய்த் துறையினர், பொது மக்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் நீதிமன்ற வழக்கு உள்ளதாகவும், அரசின் கவ னத்திற்க்கு தெரியப்படுத்தி விரை வில் நிலம் அளந்து தருவதாக வாக்கு றுதி அளித்தனர். வாக்குறுதி அளித்தபடி நிலம் அளவீடு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளாததால், கடந்த மாதம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மடத்துக்குளம் வட் டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் பட்டாவிற்கான இடம்  அளவீடு செய்து தரப்படும் என வரு வாய்த்துறை அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்தனர்.  இந்நிலையில், கொமரலிங்கம் பகுதியில் அரசு வழங்கிய இடத்தில்  மடத்துக்குளம் துணை வட்டாட்சியர்  பாரதி தலைமையில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகா ரிகள் நிலத்தைச் சமன் செய்யும் பணி களை செவ்வாயன்று துவங்கினர். இதில், கட்சியின் தாலுகாச் செயலா ளர் ஆர்.வி.வடிவேல், தாலுகாக்குழு  உறுப்பினர் பன்னீர்செல்வம், அரசு ஓய் வூதியர் சங்கச் செயலாளர் கருணா நிதி, விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் காந்தி ஆகியோர் உடனிருந் தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆறு ஆண்டுக்கால போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியால் மக் கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.