கோவை, நவ.7- முன்னாள் முதல்வர் எடப் பாடி பழனிச்சாமியின் உற வினர்கள் நிலம் மோசடி செய்த தாக கூறி, கோவையில் ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு, ராசிபு ரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர், கோவை ரேஸ்கோர்ஸ் பகு தியில் உள்ள ஐஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், கடந்த 2012-ம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த், மணிக்க வுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெய ரில் வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்த னர். இதனை நம்பி சேலம், ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 86 க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தோம். நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்ற போது வாங்கிய நிலங்கள் அனைத் தும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் என்பது தெரியவந்தது. மேலும், மணி கவுண்டர், சந்தி ரகாந்த், சபாநாயகம், சங்கர், பத்மபிரியா, சிவா ஆகியோர் கூட்டு சேர்ந்து போலி யான வரைபடம் தயாரித்து நிலம் வாங்கி சுமார் ரூ.5 கோடி வரை ஏமாற்றி மோசடி செய்த தும் தெரியவந்தது. இதில், மணி கவுண்டர் என்பவர், எடப் பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பதால் போலீசார் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து பலமுறை நாங் ்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத் தும் போலீசார் எவ்விதமான நடவடிக் கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரு கின்றனர். இவ்வாறு அந்த மனுவில் குறிப் பிட்டுள்ளது.