districts

img

கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு குறைபாடு சூயஸ் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

கோவை, ஜன. 19- கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு குறை பாடு உள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சூயஸ் நிறுவனத்திற்கு ரூ 10 லட்சம் அபரா தம் விதித்து கோவை மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.  கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோ கத்தை பிரான்ஸ் நாட்டின் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு கடந்த அதிமுக ஆட்சி  தாரை வார்த்தது. குடிநீர் விநியோகத்தை குடிநீர் வாடிகால் வாரியமே விநியோகிக்க வேண்டும், தனியார் நிறுவனங்கள் விநியோ கத்தில் ஈடுபட்டால், அது பாரபட்சம் காட்டும்  எனவும், சூயஸ் கால் பதித்த இடங்களில் எல்லாம் இத்தகைய அத்துமீறல்கள் நடை பெற்றுள்ளதையும், போராட்டங்கள் வலுத்து வந்ததையும் மார்க்சிஸ்ட் கட்சி  உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள்  தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது. இந்த போராட்டங்கள் இன்றுவரையில் நீடிக் கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாற வில்லை என்பதாக திமுக அரசு வந்த பிறகும் சூயஸ் நிறுவனம் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்நி லையில் எப்போதும் சர்ச்சைக்கு உள்ளா வதே சூயஸ் நிறுவனத்தின் வழக்கமாக மாறி விட்டது. ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகளை இன்னமும் முடிக்க வில்லை என்று மாமன்றத்தில் மேயர், மண்ட லத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கொதித்தனர். பின்னர், மாமன்றத்தில் கண் டித்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கட்டுமான பணிகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக கோவை  மாநகராட்சி ரூ10 லட்சம் அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ளது.  கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 31 ஆவது வார்டில் சூயஸ் நிறுவ னம் சார்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி யின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனை கோவை மாநகராட்சி ஆணை யர் சிவகுரு பிரபாகரன் கடந்த 3ஆம் தேதி யன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அடித்தளம் இடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளுக்கு அருகாமையில் உள்ள கட்டி டங்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ளுமாறு சூயஸ் நிறுவன ஊழியர்களுக்கு அறிவு றுத்தினார். இந்த நிலையில் வெள்ளிக்கி ழமை அன்று அப்பகுதியில் மாநகராட்சி ஆணையர் மீண்டும் ஆய்வு மேற்கொண்ட போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும்  சுரேஷ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்ப டாதது தெரியவந்தது. இதனை அடுத்து அந்நி றுவனத்துக்கு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நோட்டீஸ் வழங்கிய துடன் ரூ10 லட்சம் அபராதம் விதித்து உத்தர விட்டார்.