நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் சுமார் 30 ஆயிரம் விசைத்த றிகளும், ஏராளமான நூற்பாலைகளும் இயங்கி வருகின்றது. இந்த தொழில்களை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட் சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். ஊராட்சியாக இருந்த பள்ளிபாளை யம், பேரூராட்சியாக மாறி தற்போது நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. பள்ளிபாளையத்தில் உள்ள 4 முனை சந்திப்பு வழியாக நாமக்கல், திருச்சி, ஆத் தூர், கரூர், தருமபுரி, சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு. நாள்தோறும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், கனரக வாகனங்களும் செல்கின்றன. ஆயிரக்க ணக்கான மக்கள் இங்கிருந்து பேருந்துக ளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின் றனர். வளர்ந்து வரும் பள்ளிபாளையம் பகு தியில் கடந்த 2021 ஆம் ஆண்டு போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பள்ளிபா ளையத்தில் இருந்து ஆலாம்பாளையம் பேரூராட்சி வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடை பெற்று வந்தது. இப்பணியானது 2024 மார்ச்-க் குள் முடிவடையும் என்று திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது 80 சதவிகிதம் பணி மட்டுமே நிறைவடைந்துள் ளது. மீதமுள்ள பணிகள் நிதி பற்றாக்குறை யால் ஆமை வேகத்தில் நடைபெற்று வரு கிறது. நிலுவையில் உள்ள நிதி 20 சதவிகிதப் பணியானது பள்ளிபாளை யம் 4 ரோடு முக்கிய சந்திப்பு பகுதியில் மிக வும் தொய்வாக நடப்பதால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. மேலும் அல மேடு என்ற பகுதியில் ரயில்வே கிராசிங் மேம் பாலம் அமைக்கும் பணி, மேம்பால தூண் கள் அமைத்ததோடு மட்டுமே உள்ளது. மீத முள்ள பணிகளை இன்னும் தொடங்கப்ப டவே இல்லை. மேலும், நூற்றுகணக்கான பணியாளர்கள் வேலை பார்த்து வந்த இடத் தில், தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பணியாளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வரை, வேலை மார்ச் மாதம் முடிவடையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலும் பல மாத காலமோ அல்ல வருடமோ தாமதமாகும் என தெரிகிறது. கட்டுமானப் பணிக்கான கூடு தல் நிதி மேல்மட்ட குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை செய் யப்பட்ட நிதி இன்னும் நிலுவையிலேயே உள்ளது. மேல்மட்ட குழுவிடம் இருந்து கூடு தல் நிதிக்கான ஒப்புதல் வரும் பட்சத்தில் மட்டுமே மேம்பால பணி வேகம் எடுக்கும் என தெரிகிறது. அதிகாரிகள் இந்த பணி விரைவில் முடி யும் என்று மக்களிடம் பொய் சொல்கிறார் களா? என்ற கேள்வி எழுகின்றது. மந்தகதி யில் நடக்கும் இப்பணியால் வேலைக்கு செல் பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாண வர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின் றனர். இதனிடையே தற்போது மேம்பாலம் கட் டப்பட்டு வரும் பள்ளிபாளையம் நான்கு ரோடு சந்திப்பில், அந்த பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்கூடங்கள் அகற்றப்பட்டன. மேலும், திருச்செங்கோடு சாலை வழி யாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் காவிரி ஆர்.எஸ். வழியாக திருப்பி விடப் பட்டுள்ளது. இதனால் பேருந்துக்காக காத்தி ருக்கும் பயணிகள் வெயில் நேரங்களில் ஒதுங்குவதற்கு கூட இடமின்றி தவிக்கின்ற னர். மேலும், வாகன போக்குவரத்துக்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேம் பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. -பிரபாகரன்