districts

img

கனமழையில் இடிந்து விழுந்தது குழிப்பட்டி பள்ளிக் கட்டிடம்

திருப்பூர், ஜூன் 18-  உடுமலைபேட்டை அருகே சனியன்று பெய்த கனமழையில் குழிப்பட்டி மலைவாழ் மக்கள் செட்டில்மெண்டில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டிடம் இடிந் தது. அப்போது அங்கு யாரும்  இல்லாததால் விபத்து தவிர்க்கப் பட்டது.  உடுமலைபேட்டை மலைப்  பகுதி குழிப்பட்டி செட்டில் மெண்டில் மலைவாழ் குழந்தை கள் படிப்பதற்கு தொடக்கப் பள்ளி உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் பள்ளிக் கட்டிடம் சிதி லம் அடைந்திருப்பதால் கடந்த  பல ஆண்டுகளாக செயல்படா மல் முடக்கி வைக்கப்பட்டுள் ளது. இதனால் ஏராளமான குழந் தைகள் பள்ளிக்குச் செல்வது தடைப்பட்டுள்ளது. குழிப்பட்டி பள்ளியை சீரமைத்து செயல் படுத்தினால் இந்த குழந்தைகள் மீண்டும் தொடக்கக் கல்வி பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே  உடனடியாக இப்பள்ளியை சீர மைக்க மாவட்ட நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலி யுறுத்தி வந்தனர். இங்குள்ள ஆசி ரியர்கள் தங்குவதற்கான அறை யும் மோசமாக பாதிக்கப்பட்டி ருப்பதால் ஆசிரியர்களும் வரத்  தயங்கும் நிலை உள்ளது.  இப்பள்ளியை சீரமைத்து செயல்படுத்தினால் ஒரு தலை முறை குழந்தைகளின் கல்வி வாய்ப்பு மேம்படும் என்று மலை வாழ் மக்கள் வலியுறுத்தி வந்த னர். இந்த நிலயில் சனிக்கிழமை  மதியம் பெய்த கனமழையில் குழிப்பட்டி தொடக்கப் பள்ளி யின் முகப்புப் பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது யாரும் அங்கு இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த பள்ளியின் சிதிலம டைந்த நிலை குறித்து கடந்த டிசம் பர் 22ஆம் தேதி தீக்கதிர் நாளேட் டில் செய்தி வெளியிடப்பட்டிருந் தது. மாவட்ட நிர்வாகம் இப்பள் ளியை சீரமைக்க நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்களின் கல்வி வாய்ப்பு கிடைப்பதுடன், இப்போது நேரிட்ட விபத்தும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று மலைவாழ் மக்கள் கூறினர்.