districts

img

இந்தியா கூட்டணிக்கு குரும்பர் பேரவை ஆதரவு

நாமக்கல், ஏப்.7- இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு, குரும்பர் சமுதாயப் பேரவையினர் ஆத ரவு தெரிவித்துள்ளனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செய லாளரும், மாநிலங்களவை உறுப்பினரு மான கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரை நேரில் சந்தித்த, குரும்பர் சமுதாயப் பேரவையின் மாநிலச் செயல் தலைவர் வை.ராஜ்குமார் தங்களுடைய ஆதரவு கடிதத்தை வழங்கி னார். மேலும், நடைபெற உள்ள மக்களவை  தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றிக்குப் பாடுபடுவதாகத் தெரிவித்தனர்.  இந்நிகழ்வில், குரும்பர் சமுதாயப் பேரவை யின் இளைஞரணி செயலாளர் திருமுரு கன், ஒன்றியச் செயலாளர் கணேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.