districts

கும்பகோணம் மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

போலி கையெழுத்திட்டு ரூ.5 லட்சம் மோசடி ஊழியர் மீது காவல்துறையில் புகார்

கும்பகோணம், மே 15- தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் நர்சிங் (வயது 32). இவர், கும்பகோணத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இளநிலை உதவி யாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திரு மணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அறநிலை யத்துறை சார்பில் கிராம கோவில் பூசாரி களுக்கு ஆலய மேம்பாட்டு நிதியாக ஆண்டு தோறும் ரூ.9 ஆயிரம் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் பூசாரிகளுக்கு வழங்கு வதற்காக அறநிலையத்துறை உதவி ஆணையரின் கையெழுத்திட்ட காசோலை கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் உதவி ஆணையரின் கணக்கில் போதுமான இருப்பு தொகை இல்லை என காசோலையை வங்கி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இத னால் அதிர்ச்சி அடைந்த அறநிலையத்துறை யினர், வங்கிக்கு சென்று கணக்கு விவரங்க ளை ஆய்வு செய்தனர். அப்போது இளநிலை உதவியாளர் நர்சிங், அறநிலையத்துறை உதவி ஆணை யரின் கையெழுத்தை போலியாக 50க்கும் மேற்பட்ட முறையில் போட்டு ரூ.5 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இத னைத்தொடர்ந்து அறநிலையத்துறை உதவி  ஆணையர் இளையராஜா, போலி கையெழுத்து போட்டு மோசடி செய்த நர்சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தர விட்டார். மேலும் இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த  3,171 பேர் சொந்த ஊர் செல்ல பதிவு செய்துள்ளனர்

தஞ்சாவூர், மே 15- தஞ்சையில் ஆட்சியர் அலுவ லகத்தில், கொரோனா தடுப்புப் பணி கள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் ஆட்சியர் ம.கோவிந்த ராவ் பேசுகையில், “தஞ்சை மாவட்டத் தில், பீகாரைச் சேர்ந்த 1,126 பேர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 406 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 339 பேர், ஜார்கண்ட்டைச் சேர்ந்த 226 பேர் உள்ளிட்ட பல மாநிலங்க ளைச் சேர்ந்த மொத்தம் 3,171 பேர், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இணையதளத்தில் பதிவு செய்துள்ள னர். தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து இங்கேயே தங்கி பணி புரிய விருப்பமுள்ளவர்கள் தவிர்த்து,  மற்றவர்கள் சொந்த மாநிலம் செல்ல  உரிய முன்னேற்பாடுகளை தொடர்பு டைய வருவாய்த்துறை அலுவலர் கள் மேற்கொள்ள வேண்டும்.  மாவட்டத்தில் 8 சோதனைச் சாவடி கள் மூலம் தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகின்றன. கொரோனோ பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்து இருந்தால், அவர்களுக்கு பரி சோதனை செய்து அதன் முடிவு வரும்வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்க வைக்க வேண்டும். நடப்பாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 107 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள் ளது. பணிக்குரிய பாசனதாரர்கள் சங்கம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும், சங்கங்களைப் பதிவு செய்து, வரும் வாரங்களுக்குள் பணிகளை விரைந்து தொடங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் தேசிய ஊரக வேலை உறுதி  திட்டத்தில், விவசாயிகளின் கோர்க் கையை ஏற்று, விவசாயிகள் பதிவு செய்துள்ள பணிகளுக்கு முன்னுரி மை அடிப்படையில் பணியாளர்க ளை பயன்படுத்திக் கொள்ள வேளாண் துறை அலுவலர்களும் ஊராட்சி அலுவலர்களும் கலந்தா லோசித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என ஆட்சியர் தெரி வித்தார். 

நாகை ஆட்சியர் நடவடிக்கையால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளிகள்

சீர்காழி, மே 15- நாகை மாவட்டம் கொள்ளிடம், புளியந்துறை, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150 செங்கல் தொழிலாளிகள் கோயம்புத்தூரில் மாவுத் தாம்பதி ஊராட்சியில் ஒருவர் நடத்தும் செங்கல் சூளையில் வேலைக்குச் சென்று ஊரடங்கால் வர முடியாமல் அங்கேயே சிக்கித் தவித்தனர். இது குறித்து தகவல றிந்த விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செய லாளர் ஆறுபாதி கல்யாணம், கொள்ளிடம் வட்டார செய லாளர் விசுவநாதன் ஆகி யோர் நாகை ஆட்சியர் பிர வீன்நாயரிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் ஆட்சியர் நடவடிக்கையால், 150 தொழிலாளர்களும் 5 பேருந்துகள் மூலம் கொள்ளி டம் வந்து சேர்ந்தனர்.

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஆலங்குடி, மே 15- ஆலங்குடி அருகே யுள்ள கோவிலுார் சம்பா மனையைச் சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மகள் சுமித்ரா (20). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மைக்ரோபயாலஜி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில், சுமித்ரா வின் தந்தை பழனிவேலு விற்கும், தாயார் சித்ரா விற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சுமித்ரா சம்ப வத்தன்று தனது வீட்டிற்கு அருகேயுள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதுகுறித்து தகவலிறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் கிணற்றுக்குள் கிடந்த சுமித்ராவின் உடலை மீட்ட னர்.  இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 இயற்கை சாகுபடி பணிகள் ஆய்வு 

சீர்காழி, மே 15- நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பாரம்பரிய இயற்கை விவசாய சாகுபடி திட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சாமந்தி பூ, வெட்டிவேர், பருத்தி, கேழ்வரகு, கோடை உளுந்து பயிர் சாகுபடி ஆகியவைகளை நல்லவிநாயகபுரம், ஆச்சாள்புரம், ஆகிய பகுதிகளில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம், துணை இயக்குநர் மதியரசன், கொள்ளிடம் உதவி இயக்குநர் சுப்பையன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.