தருமபுரி, ஜன.24- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில், இளம் அறிவியல் இயற்பியல் துறை முதலாமாண்டு மாணவர் ஜே.ஆர்.சத்யன், சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் ஆடவர் பிரிவில் 5 ஆம் இடம் பெற்றார். மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தின் சார்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடை பெற உள்ள மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடை யிலான ஆடவர் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளார். அதேபோல் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆடவர் ஆணழகன் போட்டியில் 75 கிலோ எடை பிரிவில், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர் மன்சூர் அலி 3 ஆம் இடம் பெற்றார். இவர் தென்மண்டல பல்கலைக்கழகங்க ளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்நி லையில், இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா அக்கல்லூரி யில் நடைபெற்றது. அப்போது கல்லூரி முதல்வர் கோ.கண் ணன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ் வில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கு.பாலமுருகன் மற் றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர்.