districts

img

வாச்சாத்தி கள நாயகன் பெ.சண்முகத்திற்கு பாராட்டு

சேலம், பிப்.13- வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர களத்தில் போராடிய சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திற்கு சேலத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா மற்றும் தமிழக அரசின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் விழா, சேலம் மாவட்டம், கருமந்துறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திமுக ஒன்றியச் செயலாளர் டி.சிவராமன், வடக்கு நாடு ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், கருமந்துறை செயலாளர் ஏ.பாக்யராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் பி.தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.