தருமபுரி, ஜன.11- கோட்டூர், ஏரிமலைக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகை யில், மண்சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி உத்தரவிட்டார். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை உள்ளிட்ட மலைக்கிரா மங்களில் வசிக்கும் பொதுமக்களி டையே சாலை, குடிநீர், மின்சாரம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் கலந்துரையாடினார். இதன்பின் அவர் கூறுகையில், கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்க ளிடையே அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, கேட்ட றியப்பட்டது. குறிப்பாக, இந்தியா வில் தேர்தல் ஆரம்பித்த காலத்திலி ருந்து கடந்த சட்டமன்ற பொது தேர் தல் வரை இம்மலை கிராமங்களில் தேர்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பொருட்களும் கழுதைகளை பயன்படுத்திதான் கொண்டு செல்லப்பட்டன. தற்பொ ழுது இந்நிகழ்வுகளுக்கு மாற்றாக டிராக்டர்கள் மற்றும் பணியாளர் களை பயன்படுத்தி தேர்தலுக்கான அனைத்து பொருட்கள் மற்றும் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை எடுத்து செல்ல அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை அடிவாரத்திலிருந்து நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் சாலை அமைக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்மலைக்கிராம பகுதி நேர நியாய விலைக்கடைகளுக்கு நான்கு சக்கர வாகனங்களில் குறிப் பாக டிராக்டர்களை பயன்படுத்தி, நியாய விலைப் பொருட்களை எடுத்து செல்ல உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது, என்றார். முன் னதாக, இந்த ஆய்வின்போது, பென் னாகரம் வட்டாட்சியர் சௌகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுரு ளிநாதன், ஜெகதீசன் உட்பட தொடர் புடைய அலுவலர்கள் கலந்து கொண் டனர்.