districts

img

கி.பி.8 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கொற்றவை வழிபாடு

உடுமலை, டிச.26- உடுமலை மற்றும் மடத்துக் குளம் பகுதிகளில் இருக்கும்  கல்வெட்டுகளை ஆய்வு செய்து வரும் உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள்  மடத்துக்கு ளம் தாலுகா,  சோழமாதேவி பகுதியில் இருக்கும் குல சேகர ஈஸ்வரர் மற்றும் குங்கும வல்லி கோயிலின் கல்வெட்டு களை ஆய்வு செய்து உள்ளார்கள். இந்தக் கோவிலில்  20 க்கும் மேற்பட்ட  கல்வெட்டுகள் இருந்ததையும் கோயிலின் முன்புறத்தில் கரை வழிநாட்டு சோழமாதேவி  என்ற பெயர் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், இந்தக் கோயில் வழிபாட்டிற்காக   நிலங்கள் இருப்பதாக கல்வெட்டுகளில் உள்ளது. கணியூர் - மடத்துக்குளம் சாலையில்  இருக்கும் தம்புராட்டியம்மன் கோயில் கல்வெட்டுகளில் இரண்டு பழஞ்சலாகை அச்சும்,  யாக்கியும் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் 57 வரி களைக் கொண்ட கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உள்ளது. இப்பகுதியில், தம்பிராட்டி எனும் தாய்த்தெய்வ வழிபாடு என்பது அரசர் காலத்திற்கு  முன்பே இருந்துள்ளது. அமராவதி அணையில் மலம்பிடாரி அம்மன், கொமரலிங்கத்தில்  செங்கற்பிடாரி, சோழமாதேவியில்  தம்பிராட்டி,  கடத்தூரில் பகுதியில் இடைச்சியம்மன்  வழிபாடு எனும் கொற்றவை வழிபாடு இருத்து உள்ளதால்  கரைவழியில்  கி.பி. 8 ஆம்  நூற்றாண்டிற்கு முன்பே  பிடாரி வழிபாடு மற்றும் கொற்றவை வழிபாடு இருந்ததை  உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வில் உறுதிப் படுத்தி உள்ளானர்.மேலும்,  கரைவழியில் விவசாயம் பணிகள் சார்ந்தும், அரசர்கள் ஆட்சி குறித்து கல்வெட்டு கூறும்  செய்திகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் செய்து வருகிறார்கள்.