நாமக்கல், ஜூலை 16- கொல்லிமலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள வல்வில் ஓரி விழா வையொட்டி, சாலைகளை சுத்தப் படுத்தும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கடையெழு வள்ளல்களுள் ஒருவ ரான வல்வில் ஓரி சிறந்த வில்லாளி.கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும், ஆதன் ஓரி எனவும் அழைக் கப்படுகிறார். சிறந்த வில்லாளி என போற்றப்படும் இவரின், அம்பு யானையை துளைக்கிறது. அதன்பின் புலியின் வாயை துளைத்தது. வாய் பிளந்து உயிர் பிரிந்த புலியின் பின் னால் நின்ற மானை துளைத்தது. அது இறுதியில் ஒரு மரப்பொந்தில் குடியி ருந்த உடும்பை துளைத்தது எனத் தெரி விக்கின்றனர். இப்படி ஒரே அம்பில் இத்தனை மிரு கங்களையும் வேட்டையாடிய அந்த வில்லாளன் யார் என அந்த வீரனை வியப்போடு பார்த்தனர் கூட்டத்தினர். அவன் தோற்றம் அவன் மார்பில் இருந்த முத்துமாலை அவன் கைகளில் அணிந் திருந்த கடகம் இவையெல்லாம் அவன் யார் என்று சொல்லிற்று. அவர்தான் கொல்லிமலை கோமகன் வில் வித்தை யில் வல்லவன் வற்றாது கொடுத்த கொடை வள்ளல் வல்வில் ஓரி என்று என பாடியிருக்கின்றனர். ஓரியிடம் பரிசு பெற்ற பாணர்கள், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும்போது வல்வில் ஓரியின் புகழையும் அவரது கொடைச் சிறப் பையும் பற்றி பாட ஆரம்பித்தார்கள்.அதைக்கேட்ட மற்றவர்களும், அவ னைத்தேடி கொல்லிமலைக்கு வர ஆரம்பித்தார்கள்.
அவர்களுக்கு வயி ராற உணவும் கொடுத்து, அவர்கள் துயில் கொள்ளவும் ஏற்பாடு செய்திருந் தார் ஓரி. பாடி முடித்த அவருக்கு பாடலின் சுவையுடன் பொன் அணி கலன்கள் பூட்டிய யானையைப் பரி சாகத் தந்தார். இப்படி வள்ளலாக இருந்தால் எப்படி செல்வம் குறைந்து விடாதா என புலவர் கேட்க இதற்கு முன்பு ஒரு சிலருக்கு தனக்கு சொந்த மான சில ஊர்களைப் பரிசாக தந்தவர் ஓரி என பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்களாம். இந்நிலையில், ஆடி மாதம் வல்வில் ஓரி விழா அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், மலர் கண் காட்சி, பல்துறை சார்ந்த கண்காட்சி அரங்கம், வில்வித்தை போட்டி உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது. இந்த விழா, வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இதற்காக சேந்தமங்கலம் நெடுஞ் சாலை துறையின் சார்பில், 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கொல்லிமலை மலைப் பாதையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதவி செயற்பொறியாளர் சுரேஷ் குமார், பொறியாளர் பிரனேஷ் ஆகி யோர் தலைமையில், 100க்கும் மேற் பட்ட பணியாளர்கள் தடுப்பு சுவர் களுக்கு வெள்ளை அடிப்பது, சாலை ஓரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.