districts

img

மதுபாட்டில்களும், நெகிழிகளின் ஆதிக்கத்தில் கொல்லி மலை

இயற்கையின் பேரழகு கொஞ்சும்  மலைகளில் ஒன்று கொல்லி மலை.  ஒரு நாள், இரண்டு நாள் குடும்பத் தோடு குறைந்த செலவில், நிறைந்த மனதோடு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற  இடம் கொல்லி மலை என்பது ஊர் சுற்றி யவர்கள் உணர்வார்கள். நாமக்கல் மாவட்டம், சேந்த மங்கலம் தொகுதியில் கொல்லி மலை  உள்ளது.  இம்மலைகளில் காணப்படும்  அதிகப்படியான மூலிகைகள் உள்ள தால், இம்மலையை ‘மூலிகைகளின் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது.  தமிழகத்தின் சுற்றுலா தலங்களில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் கொல்லி மலை கருதப் படுகிறது. சென்னை, நீலகிரி, கோவை,  சேலம்,ஆத்தூர்,கள்ளக்குறிச்சி,போன்ற மாவட்டகளிலிருந்தும், புதுச் சேரி, கேரளா,போன்ற பிற மாநிலங் களை சேர்ந்தவர்களும் அதிகளவு வருகை தரக்கூடிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி,  அறப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட  இடங்கள் பிரசித்தி பெற்றது என் றாலும், மாசிலா அருவி, நம் அருவி, படகு பூங்கா, தாவரவியல் பூங்கா, எட்டுக்கை அம்மன் கோவில்,மாசி பெரியண்ண சாமி கோவில் என கொல்லி மலை முழு வதுமே பேரழகு நிறைந்த இடமாகும். கொல்லிமலையின் இதய பகுதியில் உள்ள, அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும், வருகை தந்து வழிபாடு நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.  கொல்லி மலைக்கு இரண்டு வழி களில் உள்ளது.  நாமக்கலில் இருந்து,  சேந்தமங்கலம் வழியாகவும்,  ஆத்தூர் சாலையிலிருந்து, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி வழியாகவும் கொல்லிமலைக்கு வரலாம். பெரும் பாலானோர் நாமக்கல் வழியே, சேந்த மங்கலத்திற்குள் புகுந்து, காரவள்ளி வழியாக கொல்லிமலைக்கு வரு கின்றனர்.

இங்கு விளையும் மிளகு, அதிக காரத்தன்மை கொண்டதாகவும், அதிக  ருசி கொண்டதாகவும் கருதப்படு கிறது. மேலும், வாழைத்தார், அன்னாசி  பழங்கள், பலாப்பழம், உள்ளிட்ட காய் கனி பழங்கள் அதிகம் விளைகிறது.  கொல்லிமலையை  மேம்படுத்த தமிழக  சுற்றுலாத்துறை நிதியை ஒதுக்கி  பல்வேறு திட்டங்களை செயல் படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும்,  உள்ளூர் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட நிர்வா கத்தின் அலட்சியம் அல்லது கண் காணிப்பின்மை காரணமாக கொல்லி மலை தனது அடையாளத்தை இழந்து  விடுமோ என்கிற அச்சம் உருவாகி யுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும்  இம்மலையின் தனித்துவ அடை யாளத்தை சிதைக்கும் நோக்கில் சுற்றுலா வருகிறவர்களில் சிலர், சாலை யிலேயே அமர்ந்து மது அருந்தி பாட்டில்களை வீசி எரிவதும், பார்க்கும்  இடமெல்லாம் பிளாஸ்ட்டிக் குப்பை களை போட்டுச்செல்கிற நடவடிக்கை, தாய்ப்பாலில் விஷத்தை கலக்கிற வேலையை செய்கிறார்கள் என்பதே வேதனை.

இந்த  பொங்கல் பண்டிகையின் போது நான்கு நாட்கள் தொடர் விடு முறையால், சுற்றுலா பயணிகள் கொல்லிமலையில் அதிகளவில் குவிந் தனர். ஏற்கனவே கொல்லிமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லிமலை வனச்சரக பகுதியில் பெரும்பாலான இடங்களில், குறிப் பாக செங்கரை அடுத்துள்ள பல்வேறு  இடங்களில் வாகன போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களில், சாலை  ஓரங்களில் மது அருந்துவோர் எண் ணிக்கை அதிகரித்தது. இதனை  கண்டும் காணாதது போல அதிகாரி கள் சென்றது அதிர்ச்சியை ஏற் படுத்தியது. பிளாஸ்ட்டிக் பைகளில் மிச்ச உண வோடு வீசி எரிவதும், அங்குள்ள வன விலங்குகள் உணவுகளை உட் கொள்ள வரும்போது, பிளாஸ்டிக் குடன் சேர்ந்து உணவை உண்பதால், தொண்டையில் பிளாஸ்டிக் கழிவுகள்  சிக்கி சில நேரங்களில் குரங்குகள் உயிரிழக்கிற சோகமும் நடை பெற்றுள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர்  விஜய்  கூறுகையில்,  தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், மிகச்சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. மேலும் மிகக் குறைந்த செல வில், ஏழை ,எளிய மக்கள் எளிதில் வந்து  செல்லக்கூடிய பகுதியாக கொல்லி மலை உள்ளது. ஆனால் இங்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு, பொழுது போக்குவ தற்காகவே இங்கே அதிகளவு வரு கின்றனர். இதன் காரணமாக கொல்லி மலையின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், மது பாட்டில் குவியல்கள் அதிகமாக உள்ளது. மேலும் இதையெல்லாம் கவனித்து தடுக்க வேண்டியவர்களும் தடுக் காமல் இருக்கின்றனர். இதனால் கொல்லிமலையில் சுகாதார சீர்கேடு  பாதிப்பு அதிகரித்துள்ளது.  இந்த பொங்கல் பண்டிகைக்காக வழக் கத்தை காட்டிலும் அதிகளவு சுற்றுலா  பயணிகள் வந்தனர். எந்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் வந்தார்களோ,

அந்த அளவுக்கு கொல்லிமலையின் பல்வேறு இடங்கள் மாசுபட்டு உள்ளது என்பதே எதார்த்த உண்மை.  மேலும், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணி களில் ஒரு சிலர் மது அருந்திவிட்டு, அங்கேயே பாட்டிலை வீசிவிட்டு அருவியில் குளிக்கின்றனர். ஆகாய  கங்கை நீர்வீழ்ச்சி பகுதியில் உடை கள் மாற்றும் இடத்தில்,சுற்றுலா பயணிகளின் பொறுப்பின்மை காரணமாக,அதிகளவு பழைய துணி கள் தேக்கமடைந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் கொல்லிமலைக்கு வரும்  சுற்றுலாப் பயணிகளின் கண்கா ணிப்பை அதிக படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகள்  அதிகம் கூடும் இடங்களில், குப்பைத்தொட்டிகள் அமைத்து குப்பைகளை போடுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் கொல்லிமலையை முழுமை யாக பாதுகாக்க முடியும் என்றார்.  பூமிப்பந்தை வெப்பமயத்தில் இருந்து பாதுகாக்க உலகம் போராடு கிறது. சூழலியலை பாதுகாப்போம் என்கிற குரல் உரத்து முழங்குகிறது. இயற்கையோடு இயந்து வாழ்ந்த பண்பாடு தமிழர்கள் பண்பாடு என் பதை சங்க இலக்கியங்களின் குறிப்பு கள் அறிவிக்கிறது. இவ்வளவு அறி வார்ந்த சமூகத்தின் தொடர்ச்சியாய் வாழுகிற நாம் இயற்கையின் வடிவ மைப்பான கொல்லிமலைக்கு கொள்ளி வைப்பதை அனுமதிக்க கூடாது. மாவட்ட நிர்வாகமும், வனத் துறையும் இணைந்து கொல்லி மலையை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும். 

-மா.பிரபாகரன்
பள்ளிபாளையம்