ஈரோடு, நவ.12- நசியனூர் பேரூராட்சியில் பொதுசுகாதாரத்தை பாது காக்கும் வகையில், குப்பை கொட்டும் இடங்களில் கோலம் வரைந்து குப்பைகள் கொட்டாமல் தடுக்க விழிப்புணர்வு இயக்கத்தை பேரூராட்சி நிர்வாகம் முன் னெடுத்துள்ளது. நசியனூர் பேரூராட்சி ஈரோடு மாநகராட்சிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இப்பேரூராட்சி யில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. வணிக நிறு வனங்களும் அதிகரித்தே வருகின்றன. இதனால் திடக் கழிவு மேலாண்மை என்பது சவாலானதாக இருந்து வரு கிறது. இந்நிலையில். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நூதன முறைகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்புகளில் அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடங்களை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்த னர். அவ்விடத்தில் பூ செடிகளை நட்டு வைத்தனர். ரங் கோலி போன்ற கோலங்கள் வரைந்து வைத்தனர். குப்பைகளை கொட்டாதீர் என்ற வாசகங்களையும் அதில் சேர்த்தனர். குப்பை கொட்டும் இடங்கள் இவ்வாறு மாற்றமடைந்துள்ளதைப் பார்த்து பொதுமக்கள் விழிப் புணர்வு பெற்றுள்ளனர். இதனால், குப்பைகள் கொட்டு வது குறைந்துள்ளது. இதுபோல பேரூராட்சியில் 2 இடங்களில் இந்த விழிப் புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முயற் சிக்கு நல்ல வரவேற்புள்ளதாக பேரூராட்சி தலைவர் மோகனபிரியா லோகேஸ்வரன் மற்றும் செயல் அலுவ லர் பா.கோவிந்தராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.