நீலகிரி மலைகளின் மிக உயரமான அருவி, கோல காம்பாய் மலை யின் வடக்கே உள்ள கோல காம்பாய் அருவி ஆகும். இது 400 அடி (120 மீ) துண்டுபடாத நீர்வீழ்ச்சியைக் கொண்டுள்ளது. இதன் அருகில் 150 அடி (46 மீ) ஹலாஷனா அருவி உள்ளது. இரண்டாவது மிக உயர்ந்த அருவியானது கோத்தகிரிக்கு அருகிலுள்ள கேத்தரின் அருவி ஆகும். இது 250 அடி (76 மீ) உயரம் கொண்ட அருவியாகும். இது நீலகிரி மலைகளில் காப்பி தோட்டங்களை அறி முகப்படுத்தியதாக நம்பப்படும் எம்.டி. காக்பர்னின் மனைவியின் பெயரால் அழைக்கபடுகிறது. மேல் மற்றும் கீழ் பைக்காரா அருவி முறையே 180 அடி (55 மீ) மற்றும் 200 அடி (61 மீ) அருவி களைக் கொண்டுள்ளது. 170 அடி (52 மீ) உயர கல்லட்டி அருவி செகூர் சிகரத்தில் உள்ளது. அருவங்காடு அருகே உள்ளது கார்தேரி அருவி ஆகும். இங்கு தான் முதல் மின்நிலையம் இருந்தது. இதிலிருந்து அசல் கோர்டைட் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல், குன்னூர் அருகே லாஸ் அருவி அமைந்துள்ளது.