districts

மழை வெள்ளத்தில் அடித்து சென்ற 27 கடைகள்: நிவாரணம் வழங்க கோடாந்தூர் மக்கள் கோரிக்கை

திருப்பூர், பிப்.11- உடுமலை கோடாந்தூர் மலை  கிராமத்தில் மலைவாழ் மக்கள் நடத்தி வந்த 27 கடைகள் மழை வெள் ளத்தில் அடித்து செல்லப்பட்டுள் ளன. எனவே பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி நிவாரணம்  வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் திங்களன்று நடைபெற்ற மக் கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த னர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற் றது. இதில், திருப்பூர் மாவட்டம் அவி நாசி வட்டம், பெருமாநல்லூர் ஊராட் சியில் கடந்த டிசம்பர் மாதம் 2024 ஆம்  ஆண்டு ஊராட்சி பணியின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பொது நிதி யிலிருந்து சிஎஸ்ஐ காலனி ரோடு மற்றும் பொடாரம்பாளையம் பொதுக்கழிப்பிடம் கட்டுமான பணி கள் நடைபெற்று வந்தது. ஆனால்  பணிகள் முழுமையாக முடிய வில்லை. இதனால், பொதுமக்கள் மாதக்கணக்கில் அவதிப்பட்டு வருகி றார்கள். எனவே உடனடியாக இப்ப ணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என பெருமாநல்லூர் முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர்  சாந்தா மணி மற்றும் முன்னாள் துணைத் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் மனு அளித்தனர்.  உடுமலை கோடாந்தூர் மலை கிராம மக்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, உடுமலை கோடாந் தூர் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் பெய்த மழையில் 27 கடைகள்  அடித்து சென்று விட்டது. இதனால்  மக்களின் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.    திருப்பூர் தெற்கு வட்டம் கண்டி யன்கோவில் கிராமம் கண்டியன்  கோவில் முதல் பிஏபி வாய்க்கால்  வழியாக முதியாநெரிச்சல் செல்லும்  சாலைப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. ஆனால் சரியான அளவீடு செய்யாமலும், சாலை ஆக் கிரமிப்புகளை அகற்றாமலும் பணி கள் நடைபெறுகிறது. எனவே இந்த கிராம சாலையை முறையாக ஆய்வு  செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி  சரியான முறையில் சாலையை அமைக்க வேண்டும் என முதியாநெ ரிச்சல் ஊர் பொதுமக்கள் மனு அளித் தனர். ஈட்டிவீரம்பாளையம் ஊராட் சிக்குட்பட்ட ஸ்ரீ சக்ரா நகர் பொதுமக் கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, சக்ரா நகர் பகுதியில் கழி வுநீர் வடிகால் வசதி இல்லாமல் அவ திப்படுகிறோம். கழிவு நீர் வெளியே  செல்ல முடியாமல் ஒரே பகுதியில் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இதன் மிக அரு கிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளன. இதனால், சிறுவர் கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப் படைகின்றனர். எனவே இப்பகுதி  மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்.