அவிநாசி, டிச.17- முதல்முறையாக அங்கன்வாடி மையங்களுக்கு சீருடை கள் வழங்கப்பட்டதையடுத்து, மழலையர்கள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து முதன்மு றையாக அங்கன்வாடி மையங்களுக்கும் வண்ணச் சீருடை வழங்கப்பட்டது. இதில் ஆங்கில வழி, தமிழ் வழி என அனைத்து மைய சிறுவர், சிறுமிகளுக்கும் தனித்தனியாக 2 சீருடைகள் வழங்கப்பட்டது. சேவூர் அங்கன்வாடி மையத் தில் சீருடைகள் வழங்கப்பட்டதையடுத்து, சிறுவர், சிறுமிகள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் வண்ணச் சீரு டைகளில் குழந்தைகளை பார்த்ததில் பெற்றோரும் வர வேற்று மகிழ்ந்தனர்.