districts

img

கிட்ஸ் மாரத்தான்: 500 குழந்தைகள் பங்கேற்பு

நாமக்கல், ஜன.21- திருச்செங்கோட்டில் நடைபெற்ற சாலை பாது காப்பு விழிப்புணர்வு கிட்ஸ் மாரத்தான் போட்டியில், 500க்கும் மேற்பட்ட குழந் தைகள் கலந்து கொண்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஜி குளோபல் பள்ளி சார் பில், 2 வயது முதல் 12 வயது வரை உள்ள  மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சாலை  பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த “கிட்ஸ்  மாரத்தான்” போட்டி ஞாயிறன்று நடைபெற் றது. 2 வயது முதல் 5 வரை வயது வரை  உள்ள குழந்தைகளுக்கு 400 மீட்டர் மாரத் தான் ஓட்டப் பந்தயம், திருச்செங்கோடு அர சினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 6 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தை களுக்கான ஆண்கள் பிரிவில் இரண்டு கி.மீ தூரம் ஓட்டப்பந்தயம் மற்றும் பெண்களுக் கான 2 கி.மீ ஓட்டப்பந்தயம் ஈரோடு சாலை யிலுள்ள பள்ளியின் எதிரில் இருந்து துவங்கி யது. இப்போட்டிகளை குளோபல் பள்ளியின் இயக்குநர் குணசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் நாமக் கல், ஈரோடு, குமாரபாளையம், சேலம், ராசி புரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமார் 500 குழந்தைகள் பங்கேற்றனர். இந்நிகழ் வில் குளோபல் பள்ளியின் நிர்வாக இயக்கு நர் வெற்றிச்செல்வன், ரோஷ்னி வெற்றிச் செல்வன், யங் இண்டியன்ஸ் ஈரோடு சேப்டர் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பெற்ற குழந்தைகளுக்கு பதக் கங்கள், கேடயங்கள், காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியா ளர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.