districts

வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம், செல்போன் பறிப்பு: 7 பேர் கைது

ஈரோடு, செப்.18- ஈரோட்டில் வடமாநில தொழிலாளர் களை கடத்தி பணம் மற்றும் செல்போன் களை பறித்த 7 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வால்மிகி. இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார், ஆகியோருடன் கடந்த ஆக.14 ஆம் தேதி பீகாரிலிருந்து வேலை தேடி கேரளாவிற்கு ரயிலில் சென்று கொண் டிருந்தனர். அப்போது பீகாரைச் சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மியை தொடர்பு கொண்டு தான் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஈரோட்டிற்கு வரும் படியும் கூறி யுள்ளார். இதனை உண்மை என நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ஏற்க னவே ஈரோடு ரயில் நிலையத்தில் பிபீன் குமார் தனது நண்பர்களுடன் காத்துக் கொண் டிருந்த நிலையில், வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் வந்தவுடன் அவர்களை அழைத்து சென்று ஈரோடு, பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்தனர்.  இதன்பின் ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும் என்றும், கொடுத்தால் தான்  தங்களை விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். இத னால் அதிர்ச்சியடைந்த வால்மீகி மற்றும் அவ ரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியா மல் பீகாரில் உள்ள தங்களது உறவினர் களை தொடர்பு கொண்டு ரூ.1.10 லட்சம் ஜிபே (G Pay) மூலமாக அனுப்பி வைத்து உள்ளனர். பணம் வந்த உடனே பிபீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்திருந்த 6 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதி யில் விட்டு சென்றனர். இதன்பின் அங்கிருந்து வால்மீகி உட்பட 6 பேரும் சென்னையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று அங்கி ருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து இதுகுறித்து சென்னை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் புகார் குறித்து நடவ டிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு அந்த புகார் நகலை அனுப்பி வைத்தனர். அதன் பேரில் ஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக் குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பெரிய சேமூர் பகுதியில் இருந்த பீகாரைச் சேர்ந்த பிபீன் குமார் மற் றும் அவனுக்கு உதவியாக இருந்த ஈரோட் டைச் சேர்ந்த தமிழ் செல்வன், சுபாஷ், பிர காஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேர் மீது காவல் துறையினர் 8 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது  செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலை மறைவாக இருக்கும் புகழேந்தி, மோதி லால் ஆகிய இருவரையும் தேடி வருகின்ற னர்.