திருப்பூர், ஜன.21- கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து ஜனவரி 24 ஆம் தேதியன்று கார ணம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூலிக்கு நெசவுச் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ள னர். கூலிக்கு நெசவுச் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங் கங்களின் கூட்டு கமிட்டி கூட்டம், கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 7 வருடங்களாக கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற் பத்தியாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும், கூலி உயர்வு தொடர்பான பிரச்ச னையை தமிழக முதலமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல் லும் வகையில், விசைத்தறி உரி மையாளர்கள் சார்பில் அஞ்ச லட்டை மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது எனவும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து சோமனூர் பகுதி கூலிக்கு நெசவுச் செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச் சாமி கூறுகையில், கடந்த 7 ஆண்டு களாக கூலி உயர்வு இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு இடையே விசைத்தறி கூடங்களை இயக்கி வருகிறோம். கூலி உயர்வு தொடர் பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் ஜவுளி உற் பத்தியாளர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத் தில் அரசு அறிவித்த கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் அறி வித்த கூலி உயர்வினை ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று வரை வழங்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் கூலி உயர்வு வழங்கக்கோரி கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இதன் காரணமாக நாளொன்றுக்கு 60 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, கூலி உயர்வு வழங் காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், தமிழக அரசின் கவ னத்திற்கு தங்களுடைய பிரச் சனையை எடுத்துச் செல்லும் விதமாகவும் வரும் திங்கட் கிழமை (ஜன.24) அனைத்து விசைத்தறியாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் திருப்பூர் மாவட் டம், காரணம்பேட்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள் ளது. மேலும், அரசு அறிவித்த கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி விசைத்தறி கூட்டமைப்பு சார்பில் சுமார் 5 லட்சம் குடும்பங் கள் சார்பில் அஞ்சலட்டை வாயி லாக தமிழக முதல்வருக்கு குறுஞ் செய்தி அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலும் கூலி உயர்வு வழங்காவிட்டால், அடுத்த கட்ட மாக கூட்டு கமிட்டி கூடி அடுத்த கட்ட போராட்டங்களை அறி விக்கும் எனவும் தெரிவித்தார்.