districts

img

நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே சட்டம் என்று வந்தால், மணிப்பூர் நிகழ்வுகளை மனதில் வைத்து கொள்ளுங்கள்

கரு.பழனியப்பன் பேச்சு

ஈரோடு, ஆக.13- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று வந்தால், மணிப்பூர் நிகழ்வுகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை இணைந்து நடத்தும் புத்தக திரு விழா ஈரோட்டில் நடைபெறுகிறது. அதில் சனியன்று நடைபெற்ற மாலை நேர சிந்தனை அரங்கில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில், புத்தகத் திரு விழாக்களில் அதிகம் விற்கும் புத்தகங்கள் சமையல் குறிப்புகளாகத்தான் இருக்கும். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எழுதிய புத் தகத்தில், தமிழில் எழுதப்பட்ட முதல் சமை யல் குறிப்பு புத்தகம் இந்து பாக சஸ்திரம் (1891) என்கிறார். அப்போது 2 ரூபாய் விலை யில், 400 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகம் 2000 பிரதிகள் விற்பனையானது. இப்போது  விற்கப்படும் சமையல் குறிப்பு புத்தகங்க ளுக்கு அதுதான் முன்னோடி. அந்த புத்த கத்தின் இரண்டாவது பதிப்பு வெளிவருவ தற்குள் அலுமினிய பாத்திரம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. எனவே இரண்டாவது பதிப் பில் அலுமினிய பாத்திரத்தின் சிறப்பை பற்றி யும் இரண்டாவது பதிப்பில் ஆசிரியர் குறிப் பிடுகிறார். இரண்டாவது பதிப்பும் 2000 பிரதி கள் விற்றுள்ளது.

அந்தப் புத்தகத்தின் நோக்கம் பற்றி நூல்  ஆசிரியர் ராமச்சந்திரன் ராயர் 1890களில் எழு துகிறார். அது என்ன வென்றால், பெண் கல்வி இடைவிடாது விருத்தியடைவதும், கூடுமான இடங்களில் பெண் பிள்ளைகளே பயிற்சியா ளர்களாக இருப்பதும் சந்தோஷமான விஷ யங்களே. அதிக பெண் பிள்ளைகளுக்கு மேற் கூறியதைக் காட்டிலும் அதிக அவசியமும், முக்கியமான சமையல் தொழில், நாடோடி  வைத்தியம் ஆகியவற்றில் தேர்ச்சி உண்டாக்க இதுவரை யாதொரு முயற்சியும் செய்ததா கத் தெரியவில்லை. அந்தக் குறையை தீர்ப்ப பதே நூலின் நோக்கம் என்கிறார் நூல் ஆசிரி யர். எப்போது பெண் சமையலறையிலிருந்து வெளியே வந்து படிக்க வேண்டும் என்று  ஆரம்பிக்கிறார்களோ, அப்போதே இந்த சமூ கம் பதட்டப்பட்டு, 400 பக்கம் புத்தகம் எழுதி பெண்ணின் கையில் வந்து திணிக்கிறது. சமை யல் குறிப்பு புத்தகம் ஏன் வந்து கொண்டேயி ருக்கிறது என்றால், மறைமுகமாக பெண் ணிற்கு ஒன்றை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீ என்ன வேண்டுமானாலும் செய், விமானம் ஓட்டு, நிலாவில் கால் வை,  அதெல்லாம் முக்கியமில்லை. பூண்டு ரசத்தை நன்றாக வை. நான் சொல்லித் தருகிறேன் என்று புத்தகம் அடித்துக் கொண்டே இருக் கின்றனர். இவ்வாறு எல்லாவற்றின் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால், நாம் அந்த அரசியலை புரிந்து கொண்டு, அவற்றை விலக்கிவிட்டு, அந்த புத்தகத்தை கொண்டா டித்தான் ஆக வேண்டும். புள்ளி விபரங்கள் என்பது முக்கியமானது. அந்த துறையின் இயக்குநராக 2018 ஆம் ஆண்டில் ஜேம்ஸ்  நியமிக்கப்பட்டார். பிரதமர் மோடி ஜெர்மனி சென்றிருந்த போது, “இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் எவருக்கு மில்லை. அதை முழுமையாக ஒழித்து விட் டோம்” என்றார். உடனே ஜேம்ஸ் இந்தியா வில் 19 விழுக்காடு வீடுகளுக்கு கழிப்பிடம் இல்லை என்ற புள்ளி விபரத்தை வெளியிட் டார். இந்தியாவில் அனைவருக்கும் எரிவாயு இணைப்பு கொடுத்தாயிற்று, என்றார் மோடி. அதுவும் உண்மையில்லை, 40 விழுக்காட்டி னருக்கு சமையல் எரிவாயு இணைப்பு பெற வில்லை என்றார் ஜேம்ஸ். இதனால் சமீபத் தில் ஜேம்ஸ் நீக்கப்பட்டார்.

வடமொழிகளில் எல்லாவற்றிலும் தனி யாக சட்ட புத்தகம் இருக்கிறது. ஆனால்,  தமிழ் மொழியில் சட்ட புத்தகம் இல்லை. அறம் பேசும் நீதி நூல்கள் தான் உள்ளன. பல் வேறு மொழிகள், கலாச்சாரங்கள், உடை, உணவு என இருந்தாலும் இணக்கமாக அனை வரும் கொண்டாட்ட வாழ்வு வாழ்ந்து கொண் டிருக்கிறோம். இங்கே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சட்டம் என வந்தால் தயவு செய்து மணிப்பூரை மனதில் நினைத்து கொள்ளுங்கள். இஸ்லாமியரை, கிறித்தவரை சிறுபான் மையினரைத்தான் அடிக்கிறார்கள் என்று சும்மா இருக்கக்கூடாது. அவர்களை நாம் காப்பாற்றுவோம். ஒருவேளை அவர்களை ஒழித்துவிட்டால் நீங்களும், நானும் என்ன ஆவோம்? உங்களை ஒரு நாளும் அவன் சம மாக வைத்துக் கொள்ளவே மாட்டான். உங் களை அடியால் வேலைக்கு கூப்பிடுகின்ற னர். உங்களால் வாழ்நாளில் நிர்மலா சீத்தா ராமனாக ஆகவே முடியாது. அர்ஜூன் சம் பத்களை தான் தேடிக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் துப்பாக்கியும், கத்தியும் வைத்திருக்கிறார்களே எப்படி வந்தது? அவர் களின் அடிப்படை தத்துவம் இந்துவை ராணு வமாக்கு என்பது. ராணுவத்தை இந்து மய மாக்கு என்பது. இப்படி மிக தைரியமாக ஒரு பெண்ணை சாலையில் ஆடைகளின்றி ஒரு கூட்டமே சேர்ந்து கூட்டிட்டு போகிற காட் சியை எங்குமே பார்த்ததில்லை. இன்றைக்கு அது சாதாராண காட்சி போல் நம்மிடையே  உலா வருகிறது என்றால், இவர்கள் நம்மை  எதை நோக்கி தயார் செய்கிறார்கள் என்பது  மிக முக்கியம். அதைப்பற்றி பொறுப்பில் இருப்பவர்கள் எவரும் பதில் சொல்ல மாட் டார்கள் என்றால் அது ரொம்ப முக்கியம். அந்த கத்தி உங்கள் கழுத்திலும் வைக்கப் படும். இவை எல்லாவற்றையும் கருத்தால் எதிர்கொள்வதற்கு, பேசுவதற்கு படிப்பு மிக வும் முக்கியம். இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.