districts

img

ஆகாய தாமரை மூலம் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கனிமொழி எம்பி உபகரணங்களை வழங்கினார்!

தூத்துக்குடி, ஜன. 8  தென்திருப்பேரையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஆகாய தாமரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணங்களை கனிமொழி எம்பி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ் வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் தென் திருப்பேரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஆகாய தாமரை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வெள்ளியன்று வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பங்கேற்றார். பின்னர் கனிமொழி எம்பி செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: பொதுவாக நீர் வழிகளை அடைத்துக்கொண்டு வளரக் கூடிய ஆகாய தாமரைகளை அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை; வைத்துக்கொண்டி ருந்தார்கள். அதனடிப்படையில் சுற்றுப்புற சூழலுக்கும், நீர் வளங்களுக்கும் எதிராக இருக்கக்கூடிய ஆகாய தாமரைகளை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி சுய உத விக்குழு பெண்களுக்கு ஆகாய தாமரையை காய வைத்து அதன் மூலம் கூடைகள் மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி வழங்குவதற்காக ஹைதராபாத்தில் இருந்து பயிற்சியாளர்கள் வருகை தந்துள்ளார்கள். ஆகாய தாமரை வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய பொருட்களாக இருந்தது. தற்பொழுது அதனை பெண்களுக்கு வரு மானம் ஈட்டிதரக்கூடிய பொருட்களாக மாற்றி தருவதுதான் இத்திட்டத்தின் நோக் கமாகும். இதற்காக மகளிர் திட்டத்தில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக்குழுக்க ளில் உள்ள பெண்களுக்கு பயிற்சி வழங் கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு ஆகாய தாமரையின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அழகாக மாற்றி, நீண்ட உழைப்புள்ள பொருட்களாக தயார் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்ய முடியும். தூத்துக்குடி என்றால் ஆகாய தாமரை யின் மூலம் நேர்த்தியாக அழகாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக வடிவமைப்பார் கள் என்று உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும். இந்த பயிற்சி 6 மாத காலம் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளப்படும் நபர்களுக்கு 26 வகையான உபகரணங்கள் 60 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று நீங்கள் நான்கு நபர்களுக்கு பயிற்சி கற்றுக்கொடுக்கும் அளவிற்கு உங்கள் திறமைகளை உயர்த்திக்கொண்டு வாழ்வாதாரம் மற்றும் வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.