districts

img

பராமரிப்பு இன்றி கிடக்கும் காங்கேயம் கால்நடை மருத்துவமனை

திருப்பூர், அக். 25 - திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில்  பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கால் நடை மருத்துவமனையை உடனடி யாக சீரமைத்து விவசாயிகளின் கால் நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். காங்கேயம் கால்நடை மருத்துவம னையில் கால்நடை மருத்துவர்கள் பற் றாக்குறை உள்ளது. காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவ் வாறு கவனிப்பார் இல்லாமல் இருக்கும்  இந்த மருத்துவமனை வளாகம் குப்பை  மற்றும் மண் குவியல் கொட்டும் இட மாக மாறி இருக்கிறது. அத்துடன்  விபத்துக்கு உள்ளான வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தப்ப டுகிறது. காங்கேயம் இனக் காளைகளுக் கும், நாட்டு மாடுகளுக்கும் பெயர் பெற் றது காங்கேயம் பகுதி. இங்கு கால்நடை  வளர்ப்பு சார்ந்து விவசாயிகள் பெரு மளவு உள்ளனர். எனினும் கால்நடை மருத்துவமனை பராமரிப்பு இல்லாமல்  இருப்பதால் கால்நடை வளர்ப்பில்  ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்படுகின் றனர். கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் ஒருவர், கால் நடை உதவி பராமரிப்பாளர்கள் இருவர்  மட்டுமே பணியில் உள்ளனர். இதனால்  கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்ப தில் சிரமம் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், மருத்துவர்களே இல்லாத கால் நடை மருத்துவமனையில் கால்நடைக ளுக்கு மருத்துவம் பார்ப்பது எப்படி என்று தெரியவில்லை. மேலும் தற் போது சாலைகள் அகலப்படுத்தும் பணி  இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்கள் சாலைகளை அகலப் படுத்துவதற்காக தோண்டி எடுக்கும்  மண் குவியல்களை இந்த மருத்துவ மனை வளாகத்தில் வந்து கொட்டுகின்ற னர். இதனால் கால்நடை விவசாயிகள் தான் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது.  கால்நடை மருத்துவமனையை முறையாகப் பராமரித்து போதிய மருத் துவர்கள், பணியாளர்களை நியமித் தால்தான் இந்த வட்டாரத்தில் விவசாயி கள் பயன் பெற முடியும். குறிப்பாக இங்கு கொட்டப்படும் குப்பை, மண் குவி யலை அப்புறப்படுத்த உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த  வட்டார விவசாயிகள் கூறினர். காங்கேயம் மட்டுமல்லாது மாவட் டத்தின் பல பகுதிகளிலும் கால்நடை மருத்துவமனைகளில் போதிய மருத்து வர்கள், பணியாளர்கள் இல்லாமல் அவ திப்படும் நிலை உள்ளது. எனினும் காளைகளுக்குப் பெயர் பெற்ற காங் கேயம் பகுதிக்கு கால்நடை மருத்து வத் துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.