districts

img

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமலஹாசன் பேச்சு

ஈரோடு, பிப்.20- கட்சி, கொடியை தாண்டி, தேசத்தை காக்க வேண்டும் என்கிற உணர்வோடு, கை சின் னத்தை ஆதரித்து பிரச் சாரம் செய்வதாக மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் உரை யாற்றினார். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட் டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, கருங்கல்பாளையம் பகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சின்னம், கட்சி, கொடியைத் தாண்டியது தேசம். தேசத்தைக் காக்க யாருடன் கை கோக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஜனநாயகம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட வழி என்று நம்பிவிட முடியாது. ஜனநாயகத்தின் வழியாகவும், சா்வாதிகாரம் நம்மை ஆட்கொள்ள முடியும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  நம் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதற்காக இங்கு வந்துள்ளேன். இப்படித்தான் நாடு செல்ல வேண்டும் என்று நிர்ணயிக்கும் பலம் வாக்காளா்களிடம் உள்ளது. நாட்டுக்கு நன்மை செய்வதற்காக வாக்களிக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது, என்றார். முன்னதாக, இப்பிரச்சாரத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனிருந்தார்.