districts

img

கபடி போட்டி: அமைச்சர் துவக்கி வைப்பு

திருப்பூர், டிச.9- மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  கபடி போட்டிகளை சனியன்று அமைச்சர்கள் துவக்கி வைத்த னர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் சார்பில் திருப்பூர் காங்கேயம் சாலையில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான  ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி சனியன்று  நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் எஸ்.கயல்விழி செல்வராஜ்,  மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ்,  மாநகராட்சி மேயர் நா.தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக அமைச்சர் சாமிநாதன் விளையாட்டு வீரர்  மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து விளை யாட்டு போட்டியை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள்  இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.   இதில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான கபடி  போட்டிக்கு தேர்வு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.